வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
Subscribe to Oneindia Tamil
வாழப்பாடியைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பா.ம.க போராட்டம்
சென்னை:
பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் டாக்டர் ராமதாஸ் மீது, தமிழக ராஜீவ் காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி பொய்யான புகார்கள் கூறி வருவதைக் கண்டித்து மார்ச் 29-ம் தேதி தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களிலுள்ள ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா நடத்தப்படும் என்று அக்கட்சி அறிவித்துள்ளது.
கட்சியின் மாநிலத் தலைவர் ஜி.கே.மணி இதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், ராமதாஸ் மீதான வாழப்பாடியின் புகார்கள் அனைத்தும் தவறானவை. இது வன்றையைத் தூண்டி விடும் வகையில் அமைந்துள்ளது.
தனது அரசியல் நிலைப்பாட்டை அடிக்கடி ராமதாஸ் தெளிவுபடுத்தி வந்துள்ளார். இந்த நிலையில் அவர் மீது வாழப்பாடி புகார் கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது என்று கூறியிருந்தார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications