For Quick Alerts
For Daily Alerts
Just In
வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
தீவிரவாதிகளுக்கு ராப்ரி அரசு ஆதரவு: மத்திய அமைச்சர் புகார்
ராஞ்சி (பிகார்):
பிகாரில் தீவிரவாத அமைப்புகளுக்கு முதல்வர் ரப்ரி தேவி தலைமையிலான அரசு ஆதரவு தருவதாக மத்திய வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை இணை அமைச்சர் பாபு லால் மரண்டி கூறியுள்ளார்.
பிகார் மாநிலம் ராஞ்சி நகரில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், பிகாரில் சட்டம், ஒழுங்கே இல்லை. தீவிரவாதிகளின் நடமாட்டம், அவர்களது பயங்கரவாத செயல்களும் அதிகரித்து வருகிறது. வனாஞ்சல் பகுதிகளில் அதிக அளவு தீவிரவாதிகளின் செயல்பாடுகள் உள்ளன.
வனாஞ்சல் பகுதிகளை பிகார் அரசு புறக்கணித்து வருவது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அத்வானியிடம் கூறியுள்ளேன் என்றார் அவர்.
யு.என்.ஐ.
Comments
Story first published: Monday, March 27, 2000, 5:30 [IST]