வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

Subscribe to Oneindia Tamil

பஸ் எரிப்புச் சம்பவத்தில் இறந்த மாணவியின் சகோதரிக்கு பல்கலைக்கழகத்தில் பேராசிரியை வேலை

சென்னை:

தருமபுரியில் சிலரால் பஸ் எரிக்கப்பட்ட சம்பவத்தில் இறந்த மாணவி ஹேமலதாவின் சகோதரிக்கு சென்னை பல்கலைக்கழகத்தில் போராசிரியை வேலை கொடுக்கப்பட்டுள்ளது.

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவிற்கு ஊழல் வழக்கில் தண்டனை வழங்கப்பட்டதையடுத்து அதிமுகவினர் மாநிலம் முழுவதிலும் போராட்டத்தில் இறங்கினர். தர்மபுரி அருகே பிப்ரவரி 2-ம் தேதி கோவை வேளாண் பல்கலைக்கழக மாணவிகள் வந்த பஸ்சிற்குச் சிலர் தீவைத்தனர். இதில் கோகிலவாணி, ஹேமலதா, காயத்திரி ஆகியோர் இறந்தனர். இவர்களில் கோகிலவாணி மற்றும் காயத்திரி ஆகியோரின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு வேலைவாய்ப்பு வழங்கியது.

இந்த நிலையில் ஹேமலதாவின் சகோதரி உமா மகேஸ்வரிக்கு சென்னை பல்கலைக் கழகத்தின் உயிரி தொழில்நுட்பத் துறையில் பேராசிரியை வேலை வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று இந்த வேலை வழங்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உமா மகேஸ்வரிக்கு வேலை வழங்க வேண்டும் என்று அவரது தந்தை தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.

யு.என்.ஐ

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+