வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
செக் மோசடி வழக்கில் ஏப்ரல் 3-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக நடிகை ரோஜாவுக்கு உத்தரவு
சென்னை:
செக் மோசடி வழக்கில் ஏப்ரல் 3-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகவேண்டும் என்று நடிகை ரோஜாவுக்கு ஜார்ஜ் டவுன் பெருநகர குற்றவியல் 8-வது நீதிமன்ற மாஜிஸ்திரேட் மேரி கிளாடு உத்தரவிட்டார்.
சினிமா ஃபைனான்சியர் முகன்சந்த் போத்ராவிடம் வாங்கிய கடனுக்காக ரூ.8 லட்சத்துக்கு ரோஜா வங்கிக் காசோலை வழங்கினார். ஆனால், அவரது கணக்கில் பணமில்லாததால் வங்கியில் செலுத்தப்பட்ட காசோலை திரும்பி வந்துவிட்டது. இதையடுத்து ரோஜா மீது செக் மோசடி வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இவ் வழக்கு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. ஆனால், நீதிமன்றத்தில் ரோஜா ஆஜராகவில்லை.
இவ் வழக்கை பலமுறை ஒத்திவைத்தாகிவிட்டது. ஒரு முறை கூட நீதிமன்றத்தில் ரோஜா ஆஜராகவில்லை. ஏப்ரல் 3-ம் தேதி நீதிமன்றத்தில் ரோஜா கட்டாயம் ஆஜராகவேண்டும். இல்லையென்றால் அவருக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்படும் என்று மாஜிஸ்திரேட் செவ்வாய்க்கிழமை உத்தரவு பிறப்பித்தார்.
இதற்கிடையே, இவ் வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரி ரோஜா தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்து மாஜிஸ்திரேட் பிறப்பித்த உத்தரவை மறு பரிசீலனை செய்யக் கோரி ரோஜா தாக்கல் செய்த மனுவை முதலாவது கூடுதல் செஷன்ஸ் நீதிபதி எஸ்.எஸ்.பி. தர்வேஷ் புதன்கிழமை தள்ளபடி செய்தார்.
யு.என்.ஐ.