வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலக மாட்டேன்: வாழப்பாடி
சென்னை:
தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து நான் விலக மாட்டேன். அக்கூட்டணிக்கட்சியில் நானும் ஒருவன். கண்டிப்பாய் அக்கட்சியில் தான் நான் இறுதி வரை இருப்பேன் என்று வாழப்பாடி ராமமூர்த்தி நிருபர்களிடம் கூறினார்.
செவ்வாய்க்கிழமை தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சியின் கூட்டம் நடந்தது. அக்கூட்டத்தில் தமிழக ராஜீவ் காங்கிரஸ் கட்சித் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி கலந்து கொள்ளவில்லை. கூட்டம் முடிந்த பின் நிருபர்கள் வாழப்பாடி ராமமூர்த்தியைச் சந்தித்தனர்.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
பாட்டாளி மக்கள் கட்சிக்கும், தமிழக ராஜீவ் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எங்களுக்கும் பலநாட்களாக பிரச்சனை இருந்து வருகிறது. அதாவது அக்கட்சியைச் சேர்ந்த காடுவெட்டி குரு, வாழப்பாடியின் தலையைக் கொண்டு வா என்று கூறியதாக பத்திரிக்கை ஒன்றில் செய்தி வெளியாகியிருந்தது.
அவர்கள் இப்படி அறிக்கை விட்டுவிட்டு தமிழகம் முழுவதும் எனது உருவ பொம்மைகளைக் கொளுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
என் தலைக்கே விலை அவர்கள் விலை பேசிவிட்டார்கள். இது என்னை எவ்வளவு தூரம் பாதிக்கும் என்பதை அவர்கள் உணர வேண்டும். மேலும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தலைவர்கள் எடுத்த முடிவு என்னை மிகுந்த மன வருத்தத்திற்குள்ளாக்கியது என்றும் அவர் பேட்டியின் போது கூறினார்.
அரசியலில் நீங்கள் தனிமைப்படுத்தப்பட்டுவிட்டதாக உணர்கிறீர்களா? என்று கேட்டபோது அப்படி எதுவும் இல்லை என்று அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications