வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
வெள்ளை மாளிகையில் வேலி தாண்டியவர் கைது
வாஷிங்டன்:
அமெரிக்க அதிபர் கிளிண்டன் கார் வரும் பாதையில், வெள்ளை மாளிகையின் வேலியைத் தாண்டிக் குதித்த நபரை பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர்.
இந்தச் சம்பவத்தையடுத்து வெள்ளை மாளிகைக்குள் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவது சிறிது நேரத்திற்கு தடை செய்யப்பட்டது.
வெள்ளை மாளிகையின் தென் கிழக்குப் பகுதியில் உள்ள சாலைப் பகுதியில் கிளிண்டன் கார் அவருக்காக காத்துக் கொண்டிருந்தது.அப்போது ஒரு நபர் அங்கிருந்த வேலியைத் தாண்டி உள்ளே குதித்தார்.
அதிபரின் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த மெக்கின் கூறுகையில், அந்த நபர் உடனடியாக பிடிக்கப்பட்டு, விசாரணைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
அதிபர் கார் இருந்த புதர் போன்ற பகுதியில் நவீன ஆயுதம் தாங்கிய ரகசிய புலனாய்வுப் போலீஸ் மற்றும் ஒரு ரகசிய ஏஜெண்டு ஆகியோர் ரோந்து வந்து கொண்டிருந்தனர். அப்போது அந்த நபர் திடீரென வேலியைத் தாண்டி உள்ளே குதித்தார். உடனடியாக இரு புலனாய்வுப் படையினரும் பாய்ந்து சென்ற அந்த நபரை பிடித்துக் கொண்டனர். அந்த நபர் யார் என்று தெரியவில்லை.












Click it and Unblock the Notifications