வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை (எம்.ஆர்.எல்.) பெயர் மாற்றம் - இனி சென்னை பெட்ரோலியம் கார்ப்பொரேஷன் லிமிடெட் (சி.பி.சி.எல்.)
சென்னை:
சென்னை மணலியில் இயங்கி வரும் சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையின் (எம்.ஆர்.எல்.) பெயர், சென்னை பெட்ரோலியம் கார்ப்பொரேஷன் லிமிடெட் (சி.பி.சி.எல்.) என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற இந்த ஆலையின் பொதுக் குழுக் கூட்டத்தில் பெயர் மாற்றம் செய்வது தொடர்பாக முடிவு செய்யப்பட்டது. ஆலையின் பங்குதாரர்களும் பெயர் மாற்றத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளனர்.
மெட்ராஸ் என்ற பெயர் சென்னை என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளதை அடுத்தும், ஆலையின் அளவு மற்றும் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டும் எம்.ஆர்.எல். ஆலையின் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று ஆலையின் செயலாளர் வி. சீனிவாசன் தெரிவித்தார்.
குரூட் எண்ணெய்யை சுத்திகரிப்புச் செய்து பெட்ரோலியம் மற்றும் பெட்ரோகெமிக்கல்ஸ் பொருட்களை உற்பத்தி செய்து வரும் எம்.ஆர்.எல். ஆலை தற்போது மின் உற்பத்தித் துறையிலும் நுழைந்துள்ளது. 500 மெகாவாட் மின் உற்பத்தி நிலையம் அமைக்கும் பணியில் இந்த ஆலை ஈடுபட்டுள்ளது.
1965-ல் நிறுவப்பட்ட எம்.ஆர்.எல். ஆலையின் தற்போதைய ஆண்டு விற்று முதல் வளர்ச்சி ரூ.27 கோடியாக உள்ளது. உற்பத்தியைத் தொடங்கிய முதல் ஆண்டிலேயே இந்த ஆலை ரூ.3,747 கோடி வருவாய் ஈட்டியது.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications