For Quick Alerts
For Daily Alerts
Just In
வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
பெங்களூரில் செயல்பட்டு வரும் பொதுத் துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட் நிறுவனம் கடந்த நிதி ஆண்டில் ரூ.250 கோடி லாபம் ஈட்டியுள்ளது.
இது தொடர்பாக, அந் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
1999-2000-ம் ஆண்டில் நிறுவனத்தின் விற்றுமுதல் ரூ.2250 கோடியாகும். கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இது 26.20 சதவீதம் அதிகமாகும். லாபத் தொகையும் கடந்த ஆண்டை விட அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டில் விற்றுமுதல் ரூ.2048 கோடியாகவும், லாபம் ரூ.198 கோடியாகவும் இருந்தது.
கடந்த நிதி ஆண்டில் ரூ.46 கோடிக்கு பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. இந்திய விமானப்படைக்கு இரு இருக்கைகள் கொண்ட 17 ஜாகுவார் விமானங்கள் தயாரிக்கவும், கடலோரக் காவல்படைக்கு 7 டர்னியர்-228 ரக விமானம் தயாரிக்கவும் ஆர்டர் கிடைத்துள்ளது.
யு.என்.ஐ.
Comments
Story first published: Saturday, April 1, 2000, 5:30 [IST]