தமிழகத்தில் இன்று
கொழும்பு:
யானை இறவை விடுதலைப் புலிகளிடம் இழந்து எட்டு நாட்களே ஆகியுள்ளநிலையில் மற்றொரு முக்கிய ராணுவ முகாமான பலாலி விமானப் படை தளத்தைவிடுதலைப் புலிகளிடம் இலங்கை ராணுவம் இழந்துள்ளது.
யானை இறவுக்கு 15 கிலோமீட்டர் கிழக்கில் உள்ள பலாலி விமானப் படை தளத்தை,ஞாயிற்றுக்கிழமை நடத்திய திட்டமிட்ட தாக்குதலின் மூலம் விடுதலைப் புலிகள்கைப்பற்றியுள்ளனர். பலாலி தளம் மட்டுமல்லாது, அதைச் சுற்றியுள்ளகிராமங்களையும் விடுதலைப் புலிகள் தங்கள் வசம் கொண்டு வந்துள்ளனர்.
இந்த மோதலில் 14 ராணுவ வீரர்கள் இறந்தனர். 236 பேர் காயமடைந்தனர்.இறந்தவர்களில் ஒருவர் அதிகாரி. காயமடைந்தவர்களில் 14 பேர் அதிகாரிகள்.
12 மணி நேரம் நீடித்த தாக்குதலின் இறுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை 6மணியளவில் ராணுவம் முகாமிலிருந்து தப்பி ஓடியது. கனரக துப்பாக்கிகள், பீரங்கிகள்மூலம் விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தினர்.
விடுதலைப் புலிகள் தரப்பில் பெரும் படைப் பிரிவு இதில் ஈடுபடுத்தப்பட்டது.அவர்கள் தாக்குதலுக்கு முன் ராணுவத்தினரால் நிற்க முடியவில்லை. பெரிய முகாமைச்சுற்றிலும் உள்ள சிறிய முகாம்களையும் விடுதலைப் புலிகள் அழித்துத்தரைமட்டமாக்கினர்.
பலாலி முகாமிலிருந்து தப்பிய ராணுவ வீரர்கள் கிலாலி வழியாக தப்பினர். தப்பியராணுவத்தினர் ஏராளமான ஆயுதங்களையும் விட்டுச் சென்றனர். அவற்றையும்விடுதலைப் புலிகள் கைப்பற்றினர்.
பலாலியைக் கைப்பற்றியுள்ளதன் மூலம் விரைவில் யாழ்ப்பாணத்தையும் விடுதலைப்புலிகள் கைப்பற்றுவர் என்று தெரிகிறது.
தொடரும் வெற்றி:
கடந்த ஏப்ரல் 22-ம் தேதி யானை இறவு முகாமை, விடுதலைப் புலிகள் கைப்பற்றினர்.தற்போது பலாலியை எட்டே நாட்களில் பிடித்துள்ளனர். குறைந்த அளவிலானபடைகளைக் கொண்டு விடுதலைப் புலிகள் இந்த வெற்றியை சாதித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications