தமிழகத்தில் இன்று
சேடப்பட்டி முத்தையா திமுகவில் சேர வீரப்பன் அழைப்பு
திருச்சி:
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சேடப்பட்டி முத்தையா, கருப்பசாமி பாண்டியன், ரகுபதி ஆகிய மூவரும் திமுகவில் சேர்ந்து அதிமுகவை தோற்கடிக்க உழைக்கவேண்டும் என்று எம்.ஜி.ஆர்.கழக தலைவரும்,முன்னாள் அமைச்சருமான ஆர்.எம்.வீரப்பன் கூறினார்.
திருச்சி மாவட்டம் பெரம்பலூரில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
சமீபத்தில் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட இந்த மூவரும், அதிமுகவை, ஜெயலலிதாவிடமிருந்து மீட்கப் போவதாக அறிவித்துள்ளனர். அது நடக்காத காரியம்.இந்தியாவில், ஒரு கட்சியிலிருந்து நீக்கப்பட்ட யாரும், அக்கட்சியை மீட்டதாக வரலாறு இல்லை.
சேடப்பட்ட முத்தையா, கருப்பசாமி பாண்டியன், ரகுபதி ஆகிய மூவரும் திமுகவில் இணைந்து கருணாநிதி கரத்தை வலுப்படுத்த வேண்டும். திமுகவில் இருந்துகொண்டு, அதிமுகவையும், ஜெயலலிதாவையும் தோற்டிக்க வேண்டும்.
எம்.ஜி.ஆரின் பெயர், கட்சி, சின்னத்தை ஜெயலலிதா தவறாகப் பயன்படுத்தி வருகிறார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பா.ம.க தலைவர் ராமதாஸும், தமிழக ராஜீவ் காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தியும் சண்டைபோடுவதை நிறுத்தி விட்டு ஒன்று சேர வேண்டும். இல்லாவிட்டால் தமிழக நலன்தான் பாதிக்கப்படும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications