கிரிக்கெட் பெட்டிங்: : சிபிஐ விசாரணை துவங்கியது

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

இந்திய கிரிக்கெட் வீரர்கள் மீதான மேட்ச் ஃபிக்ஸிங் குற்றச்சாட்டுகள் குறித்து தனது ஆரம்பகட்ட விசாரணையை மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ)தொடங்கியது.

லஞ்சம் வாங்கியது, மேட்ச் ஃபிக்ஸிங் ஈடுபட்டது போன்ற செயல்களில் ஈடுபட்டதாக இந்திய கிரிக்கெட் வீரர்கள் மீது குற்றச்சாட்டுகள்கூறப்பட்டன. மிகவும் பரபரப்பு ஏற்படுத்திய இக் குற்றச்சாட்டுகளை முன்னாள் கிரிக்கெட் வீரர் மனோஜ் பிரபாகர் கூறியிருந்தார்.

அவரது குற்றச்சாட்டுகள் குறித்து நீதிபதி சந்திரசூட் விசாரணை நடத்தினார். நீதிபதியின் விசாரணை அறிக்கை சில நாட்களுக்கு முன் நாடாளுமன்றத்தில்சமர்ப்பிக்கப்பட்டது. அதில், இந்திய வீரர்கள் ஊழல் புரிந்ததற்கான ஆதாரம் ஏதும் இல்லை என்று நீதிபதி கூறியிருந்தார்.

ஆனால், மனோஜ் பிரபாகர் தான் கூறிய குற்றச்சாட்டுகள் உண்மை என்று கூறினார். இதையடுத்து, உண்மையை வெளிக் கொணரும் பொருட்டுகுற்றச்சாட்டுகள் குறித்து சிபிஐ விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டது.

இதையடுத்து, மத்திய புலனாய்வுப் பிரிவுப் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தங்களது முதல்கட்ட விசாரணையைத் துவங்கியுள்ளனர்.

லஞ்சம் வாங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் குரோனியே மீது தில்லி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிப்பதையும், சிபிஐ போலீஸார் கண்காணிப்பாளர்கள் என்று கருதப்படுகிறது.

இது தவிர, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் உள்ள ஆவணங்களையும் சிபிஐ போலீஸார் ஆராய்வார்கள். மேலும், விசாரணைக்குத்தேவைப்பட்டால் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளிடம் அவர்கள் விசாரணை நடத்துவார்கள் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+