தமிழகத்தில் இன்று
சென்னையில் போலீசார் அதிரடி சோதனை: திருட்டு சிடிக்கள் பறிமுதல்
சென்னை:
சென்னையில் போலீசார் நடத்திய அதிரடிச் சோதனையில் திருட்டு சி.டிக்கள், ஆபாச சினிமா சிடிக்கள் கைபற்றப்பட்டன.
சென்னையில் திரையிடப்பட்டுள்ள புதிய திரைப்படங்களின் திருட்டு சி.டிக்கள் அதிகமாக விற்பனை செய்யப்படுவதாக சினிமாத் துறையினர் போலீசில் புகார்செய்தனர். அதன்பேரில் போலீஸ் இணை கமிஷனர் சேகர் தலைமையில் ஒரு படையினர் வட சென்னை பகுதியில் வீடியோ கடைகளில் அதிரடிச் சோதனை நடத்தினர்.
அதேபோல் தென்சென்னை பகுதியில் கிண்டி போலீஸ் துணை கமிஷனர் ராஜேந்திரன் தலைமையில் தனிப்படையினர் சோதனை நடத்தினர். இதில் பர்மா பஜார்,தி.நகர், சத்யா பஜார் உள்ளிட்ட 4 இடங்களில் 900 திருட்டு சிடிக்கள் கைபற்றப்பட்டன.
இதில் 400 சிடிக்கள் தற்போது ஓடிக் கொண்டிருக்கும் புதிய திரைப்படங்களின் சிடிக்கள், அலைபாயுதே, ஜேம்ஸ்பாண்டு, ஹேராம், சந்தித்த வேளை, முகவரி,ஏழையின் சிரிப்பில் போன்ற புதிய படங்களின் திருட்டு சி.டி.க்கள் இவை. மீதமுள்ளவை ஆபாச சினிமா சி.டி.க்கள். ஆங்கில நடிகர்கள், நடிகைகளின் ஆபாசபடங்களுடன் இந்த சி.டி.க்கள் உள்ளன.












Click it and Unblock the Notifications