தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

மேற்கு திரிபுராவில் இனக் கலவரம்: 4 பேர் சாவு - ராணுவம் குவிப்பு - ஊரடங்குஉத்தரவு நீட்டிப்பு

அகர்தலா:

மேற்கு திரிபுராவில் இனக் கலவரத்தால் 4 பேர் திங்கள்கிழமை கொல்லப்பட்டதை அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. அங்கு சட்டம்-ஒழுங்கைநிலைநாட்ட ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேற்கு திரிபுரா முழுவதும் ராணுவத்தினரும், அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படையினரும் ரோந்து சுற்றி வருகின்றனர். நாளை காலை வரை ஊரடங்கு உத்தரவுநீட்டிக்கப்பட்டுள்ளது. மேற்கு திரிபுராவில் தற்போது அமைதி நிலவுவதாகவும், மோதல் ஏதும் நடைபெறவில்லை என்றும் போலீஸார் தெரிவித்தனர்.

இனக் கலவரத்துக்குக் காரணமானவர்களைப் பிடிக்கும் பணியில் ராணுவத்தினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேற்கு திரிபுரா மாவட்டத்தில் உயர்போலீஸ் அதிகாரிகளும், மத்திய ரிசர்வ் போலீஸ் அதிகாரிகளும் முகாமிட்டு நிலைமை ஆராய்ந்து வருகின்றனர்.

மேற்கு திரிபுராவில் ராதாநகர் பகுதியில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த பழங்குடியினரல்லாத இருவரை தேசிய திரிபுரா விடுதலைப் படையைச் சேர்ந்தகொரில்லாக்கள் சுட்டுக் கொன்றனர். இதற்குப் பதிலடியாக, பழங்குடியினரைச் சேர்ந்த 7 பேரை ஒரு கும்பல் கடுமையாகத் தாக்கியது.

பலத்த காயமடைந்த அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு இருவர் இறந்தனர்.

இதற்கிடையே, மேற்கு திரிபுராவில் ஏற்பட்ட இனக் கலவரம் மற்றும் அதைத் தொடர்ந்து நிலவும் சட்டம்-ஒழுங்கு நிலைமை குறித்துஅதிகாரிகளுடன் முதல்வர் மாணிக் சர்கார் ஆலோசனை நடத்தினார்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+