தமிழகத்தில் இன்று
தேயிலை மீதான விற்பனை வரியை குறைக்க தமிழக அரசுமுடிவு
சென்னை:
தேயிலை விலை வீழ்ச்சியின் காரணமாக அதன் மீது விதிக்கப்படும் 8 சதவீத விற்பனைவரியை 4 சதவீதமாக குறைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்த சலுகை 6மாதத்திற்கு தான் அளிக்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.
சட்டசபையில், தமிழகத்தில் தேயிலை விலை வீழ்ச்சி அடைந்துள்ளது பற்றியும்,அதனால் தேயிலை விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு பற்றியும், திமுக, த.மா.காஉறுப்பினர்கள் அரசின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.
ஒரு கிலோ தேயிலை 15 ரூபாய், 16 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.இப்போது 5 ரூபாய், 6 ரூபாய் அளவுக்கு விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதற்குகாரணம் வெளிநாடுகளில் இருந்து தேயிலை இறக்குமதிக்கு மத்திய அரசு அனுமதிஅளித்ததுதான். எனவே அதற்கு தடை விதிக்க வேண்டும்.
தேங்கிக் கிடக்கும் தேயிலையை பொது விநியோகத் திட்டத்தின் மூலம் ரேஷன்கடைகளில் விற்பனை செய்ய அரசு முன் வரவேண்டும் என்று உறுப்பினர்கள் கேட்டுக்கொண்டனர்.
அதற்கு பதிலளித்த முதல்வர் கருணாநிதி கூறியதாவது:
நீலகிரி தேயிலைக்கு ரஷ்யாவில் நல்ல கிராக்கி முன்பு இருந்தது. அதனால் நிறையஅளவு ஏற்றுமதி செய்ய முடிந்தது. இப்போது கென்யா நாட்டில் இருந்து மலிவுவிலையில் தேயிலையை ரஷ்யாவுக்கு ஏற்றுமதி செய்து விடுகின்றனர். இதன்காரணமாக நீலகிரி தேயிலையை வாங்குவதில்லை. மேலும் தேயிலை உற்பத்திசாகுபடியும் பெருகிவிட்டது. இதுதான் விலை வீழ்ச்சிக்கு காரணம்.
தேயிலை ஏற்றுமதிக்கு கிலோவுக்கு 2 ரூபாய் சுங்க வரி விதித்து மத்திய பட்ஜெட்டில்அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சுங்க வரியை நீக்க வேண்டும் என்று பிரதமர் வாஜ்பாய்,நிதியமைச்சர் யஷ்வந்த் சின்கா ஆகியோருக்கு நான் கடிதம் எழுதியுள்ளேன்.
மேலும் இங்கிருந்து ஒரு குழுனர் டெல்லி சென்று மத்திய நிதியமைச்சர், மத்தியவர்த்தக அமைச்சர் மாறன் ஆகியோரை சந்தித்து வலியுறுத்தி வந்துள்ளனர்.
ராணுவத்திற்காக 3000 டன் தேயிலை வாங்க வேண்டும் என்று மத்திய ராணுவஅமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டசிடம் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளேன்.
இருப்பினும் தற்போது ஏற்பட்டுள்ள விலை வீழ்ச்சியை கருத்தில் கொண்டு தேயிலைமீது தமிழக அரசு விதிக்கும் 8 சதவீத விற்பனை வரியை, 6 மாதங்களுக்கு மட்டும் 4சதவீதமாக குறைக்க அரசு முடிவு செய்துள்ளது என்றார்.