மேட்ச் ஃபிக்ஸிங்: விசாரணைக்கு இந்தியா வருகிறது ஸ்காட்லாந்து யார்டு போலீஸ்
டெல்லி:
மேட்ச் ஃபிக்ஸிங் தொடர்பாக கிரிக்கெட் வீரர்கள் மற்றும் சூதாட்டக்காரர்கள் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தஸ்காட்லாந்து யார்டு போலீஸார் இந்தியா வருகின்றனர்.
இத் தகவலை, மத்திய உள்துறை அமைச்சர் எல்.கே. அத்வானி மக்களவையில் தெரிவித்தார். கேள்விநேரத்தின்போது எழுப்பப்பட்ட துணைக்கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்:
கிரிக்கெட் ஆட்டத்தில் மேட்ச் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டதாக இங்கிலாந்து வீரர்கள் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்கஸ்காட்லாந்து யார்டு போலீஸார் விரைவில் இந்தியா வர உள்ளனர்.
தேவைப்பட்டால், ஸ்காட்லாந்து யார்டு போலீஸாருக்குத் தில்லி போலீஸார் உதவி செய்வார்கள். தனக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற கிரிக்கெட் வீரரின்பெயரை அரசு உயர் பதவியில் இருக்கும் ஒருவரிடம் தெரிவித்துள்ளதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் மனோஜ் பிரபாகர் கூறியுள்ளார். அந்த கிரிக்கெட்வீரர் பெயர் எனக்குத் தெரியாது.
இந்தியாவில் கிரிக்கெட் பெட்டிங்குக்கு சட்டரீதியாக அனுமதி அளிக்கும் யோசனை எதுவும் அரசிடம் இல்லை. மேட்ச் ஃபிக்ஸிங் தொடர்பாக சிபிஐவிசாரணை நடத்தி வருகிறது. விசாரணை முடிந்தபிறகுதான் இப் பிரச்சினையில் முடிவு தெரியவரும். குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும்நடவடிக்கை எடுக்கப்படும்.
மேட்ச் ஃபிக்ஸிங் தொடர்பாக, இருவரை தில்லி போலீஸார் கைது செய்துள்ளனர் என்றார் அத்வானி.
யு.என்.ஐ.