தமிழகத்தில் இன்று
மூடநம்பிக்கையை ஒழிக்க தாமரைக்கனி முன்வரவேண்டும்: முதல்வர்
சென்னை:
மூடநம்பிக்கையை ஒழிப்பதில் அதிமுக எம்.எல்.ஏ. தாமரைக்கனி முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்றுமுதல்வர் கருணாநதி நகைச்சுவையாகத் தெரிவித்தார்.
சட்டசபையில் சனிக்கிழமை கேள்வி நேரத்தின்போது இதுதொடர்பாக இருவருக்கும் இடையே நடந்த சுவாரஸ்யவிவாதம் வருமாறு:
தாமரைக்கனி: ரஷ்யா போன்ற நாடுகளில் போரில் உயிர் நீத்த தியாகிகள் கல்லறைகள் முன்பு தான் அந்நாட்டுமக்கள் திருமணம் செய்து கொள்கின்றனர். அப்படி நடக்கும் திருமணங்கள் "டிவியில் காட்டப்பட்டு நல்லவிளம்பரம் கிடைக்கிறது. அதேபோன்ற முறை தமிழ்நாட்டிலும் அறிமுகப்படுத்தப்படுமா?
முதல்வர்: ரஷ்யாவில் கல்லறை முன்பு கல்யாணம் செய்து கொள்கிறார்கள் என்றால், அந்நாட்டில் மூட நம்பிக்கைகிடையாது. ஆனால், இங்கு அப்படி செய்தால், "கல்யாணத்தன்று கல்லறைக்கு போகணுமா? என்று கேட்பார்கள்.அந்தளவுக்கு மூட நம்பிக்கை உள்ளது. அந்த மூட நம்பிக்கையை ஒழிக்க வேண்டுமானால், தாமரைக்கனி தம்வீட்டு கல்யாணத்தை முதலில் கல்லறை முன்பு நடத்த முன் வர வேண்டும்.
இவ்வாறு முதல்வர் கருணாநிதி பதில் சொன்னதும், சபையில் எல்லா உறுப்பினர்களும் சிரித்தனர்.












Click it and Unblock the Notifications