தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
கோவை குண்டுவெடிப்புச் சம்பவம்: கைதானவர்கள் 17-ம் தேதி கோர்ட்டில் ஆஜர்
கோயம்புத்தூர்:
கோவை குண்டு வெடிப்புச் சம்பவத்தில் கைதான 168 பேர் வரும் 17-ம் தேதி தனிக்கோர்ட்டில்ஆஜர்படுத்தப்படுகின்றனர்.
அவர்கள் மேல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும். கோவையில் கடந்த 1998 ம் ஆண்டு பிப்ரவரி 14 ம் தேதிபல்வேறு இடங்களில் குண்டுகள் வெடித்தன. இதில் 60 பேர் பலியாயினர். இது தொடர்பான வழக்கில் கடந்த மார்ச்27 ம் தேதி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
தனிக்கோர்ட்டில் நடந்து வரும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 168 பேரும் மே 17 ம் தேதி தனிக்கோர்ட்டில்ஆஜர்படுத்தப்படுகின்றனர்.












Click it and Unblock the Notifications