For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

காஷ்மீரில் பாகிஸ்தான் ராக்கெட் தாக்குதல் - 4 பள்ளிக் குழந்தைகள் பலி

ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் யூரி பகுதியில் பாகிஸ்தான் துருப்புக்கள் புதன்கிழமைநடத்திய ராக்கெட் தாக்குதலில் பள்ளிக் குழந்தைகள் 4 பேர் உள்பட 5 பேர்கொல்லப்பட்டனர்.

இந்தியத் துருப்புக்கள் மீது பாகிஸ்தானியர்கள் செலுத்திய ராக்கெட், சோடாலி என்றஇடத்தில் இருந்த அரசு நடுநிலைப் பள்ளியின் மீது விழுந்து வெடித்தது. இதில், சம்பவஇடத்திலேயே 4 மாணவர்கள் உள்பட 5 பேர் இறந்தனர்.

பாகிஸ்தான் துருப்புக்கள் தற்போது மக்கள் வசிக்கும் இடங்கள் மீதும், இந்தியபாதுகாப்புப் படையினரின் முகாம்கள் மீதும் தாக்குதல் நடத்தத் தொடங்கியுள்ளனர்.

பாகிஸ்தான் துருப்புக்களின் ராக்கெட் தாக்குதலைத் தொடர்ந்து இந்திய ராணுவவீரர்களும் பதில் தாக்குதல் நடத்தினர். இதில், பாகிஸ்தான் தரப்பில் ஏற்பட்ட சேதம்குறித்து தகவல் ஏதும் இல்லை.

கடந்த 4 நாட்களாக பாகிஸ்தான் நடத்தி வரும் இத்தகைய ராக்கெட் தாக்குதலில் 4 பேர்இறந்துள்ளனர். 12 பேர் காயமடைந்துள்ளனர். பல வீடுகள் மற்றும் கடைகள்சேதமடைந்தன.

துப்பாக்கிச் சண்டை - 8 பேர் சாவு:

இதற்கிடையே, காஷ்மீர் பள்ளத்தாக்கில் இந்திய பாதுகாப்புப் படையினருக்கும்தீவிரவாதிகளுக்கும் இடையே புதன்கிழமை நடந்த சண்டையில் எல்லைப்பாதுகாப்புப் படையைச் சேர்ந்த உதவி கமாண்டன்ட், 4 தீவிரவாதிகள் உள்பட 8 பேர்இறந்தனர்.

புல்வாமா என்ற இடத்தில் ஒரு வீட்டில் மறைந்திருந்த தீவிரவாதிகளைக் கைது செய்யும்நடவடிக்கையில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டனர். அப்போது, அவர்கள் மீதுதீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு பாதுகாப்புப் படையினரும்சுட்டனர்.

இரு தரப்புக்கும் இடையே நீண்ட நேரம் துப்பாக்கிச் சண்டை நடந்தது. இச் சண்டையின்முடிவில் 8 பேர் பலியானார்கள். தீவிரவாதிகள் மறைந்திருந்த வீட்டிலிருந்துஏராளமான வெடிபொருட்களும், துப்பாக்கிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X