தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
ஆந்திராவில் பெண் நக்சலைட் சுட்டுக்கொலை
ஹைதராபாத்:
ஆந்திராவில் பெண் நக்சலைட் உள்பட மூன்று பேர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் புதன்கிழமை நிசாமாபாத் மாவட்டம்சோமவரம்பேட் கிராமத்தில் நடந்தது.
அப்பகுதியிலிருந்து அவர்கள் விட்டுச்சென்ற இரண்டு பைகள், இரண்டு துப்பாக்கிகள் போலீசாரால் கைப்பற்றப்பட்டது.
ஆந்திராவில் போலீசார் நக்சலைட் தீவிரவாதிகளைத் தேடும் முயற்சியில் ஆங்காங்கே ரோந்துப் பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது இவர்களைபோலீசார் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர்.
இதேபோல் வாராங்கல் மாவட்டத்தில் நடந்த இன்னொரு சம்பவத்தில் மக்கள் போர்ப்படையைச் சேர்ந்த நக்சலைட்டுகள் தெலுங்கு தேசம் கட்சிக்குச்சொந்தமான லாரி ஒன்றை தீ வைத்து எரித்தனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications