தமிழகத்தில் இன்று
ஆக்ராவில் தீ: 2 பேர் பலி- 128 பேர் படுகாயம்
மாதுரா:
ஆக்ராவில் பிளாஸ்டிக் டிரம்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்த பெட்ரோல் கசிந்து ஏற்பட்ட தீ விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரோடு எரிந்துசாம்பலானார்கள். மேலும் 128 பேர் உடல் எரிந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
காயமடைந்தவர்களில் 42 பேரின் நிலை மிகவும் ஆபத்தாக உள்ளதாக டாக்டர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் மும்பையில் ஆக்ரா அருகே பேரி கிராமத்தில் புதன்கிழமை மாலை நடந்தது.
போலீஸ் கண்காணிப்பாளர் வீர் பகதூர் இதுகுறித்துக் கூறுகையில், பேரி கிராமத்தில் உள்ள கடை ஒன்றில் கன்டெய்னர் மற்றும் பிளாஸ்டிக் டிரம்களில்பெட்ரோல் அடைத்து வைக்கப்பட்டிருந்தது.
திடீரென்று அவற்றில் ஒரு டிரம்மிலிருந்து பெட்ரோல் கசிந்து தீ விபத்து ஏற்பட்டது. தீ சுற்றுமுற்றும் பரவி கொழுந்து விட்டு எரிந்தது.
இத்தீவிபத்தினால் அப்பகுதியிலுள்ள மக்கள் அலறியடித்துக் கொண்டு அங்குமிங்கும் ஓட ஆரம்பித்தார்கள். 2 பேர் சம்பவ இடத்திலேயே எரிந்துசாம்பலானார்கள்.
சம்பவம் கேள்விப்பட்டதும் தீயணைப்புப் படையினர் விரைந்து சென்று கடும்போராட்டத்திற்குப் பின் தீயை அணைத்தனர்.
விபத்தில் காயமடைந்த 128 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications