For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மேற்கிந்தியத் தீவுகளுடன் முதல் கிரிக்கெட் டெஸ்ட் - பாக். அணியில் சயீத்அன்வர் விளையாடவில்லை

By Staff
Google Oneindia Tamil News

40 வீரர்களின் உடல்களை ஒப்படைத்தனர் புலிகள்

கொழும்பு:

கடந்த திங்கள்கிழமை பலாலி ராணுவ முகாமை தாக்கியபோது கொல்லப்பட்ட 40 ராணுவ வீரர்களின் உடல்களை இலங்கைஅரசிடம் புலிகள் ஒப்படைத்தனர்.

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மூலம் இந்த உடல்கள் வழங்கப்பட்டன. முன்னதாக 13 வீரர்கள் மட்டுமே கொல்லப்பட்டதாகஇலங்கை அரசு கூறி வந்தது. இப்போது 40 உடல்களையும் ராணுவம் பெற்றுக் கொண்டுவிட்டது.

இலங்கையின் கடற்கரைப் பகுதியை தீவிரமாக கண்காணிப்பதாக அந்த நாட்டிடம் இந்தியா உறுதியளித்துள்ளது. ஆனால்,யாழ்பாணத்தில் சிக்கியுள்ள இலங்கை ராணுவத்தினரை விடுதலைப் புலிகளின் தாக்குதலில் இருந்து மீட்கும் விஷயத்தில் தன்னால்உதவ முடியாது எனவும் இந்தியா தெளிவுபடுத்திவிட்டது.

அதே நேரத்தில் இலங்கை ராணுவத்துக்கு ஆயுதங்கள், பயிற்சி வழங்கவும் இந்தியா முன் வந்துள்ளது.ஆனால், படைகளைஅனுப்ப மறுத்துவிட்டது.

பாகிஸ்தானின் வாலாட்டம காரணமாக நாட்டின் வட பகுதியில் இந்திய ராணுவம் தீவிரமாக ஈடுபட்டுள்ளதால் மற்றொருபிரச்சனையில் இந்தியா தலையிடாது என கொழும்புவில் உள்ள இந்திய ராணுவ அதிகாரி ஒருவர் கூறினார்.

புலிகளை எதிர்கொள்ள அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளின் உதவியைக் கோர வேண்டும் என புத்தமத அமைப்புகள் கூறிவருகினறனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X