தமிழகத்தில் இன்று
கோவை துளிகள்......
ஊட்டி:
தென்னகத்தின் கல்வாரி என்றழைக்கப்டடும் ஊட்டி அருகேஉள்ள காந்தர் சர்ச்சில் ஜூபிலி-2000 பெருவிழா நடந்தது. ஏப்ரல்14ம் தேதி முதல் நடந்த இந்த கிறிஸ்துவ விழாவில் சுமார் ஒருலட்சம் பேர் கலந்து கொண்டனர். இந்த சர்ச்சில் ஒவ்வொருஆண்டும் மே மாதத்தில் விழா கொண்டாடப்படுகிறது.
கோவை:
தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிறுவனம் சங்க நிர்வாகஉறுப்பினராக கோவை ஜி.ஆர்.டி அறக்கட்டளை நிர்வாகஅறங்காவலர் பத்மநாபன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.இதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. இவரதுபதவி காலம் 2 ஆண்டுகள்.
கோவை:
தமிழகத்தில் மேலும் 250 நகரங்களில் மொபைல் சேவையைவிரிவுபடுத்த ஏர்செல் நிறவனம் திட்டமிட்டுள்ளது. மேலும்இந்தியா முழுவதிலும் ரோமிங் வசதியை ஏற்படுத்த உள்ளது.மொபைல் இன்டர்நெட் வசதி ப்ரீபெய்ட் கார்டு, முக்கியசெய்திகளை ஏற்படுத்தவும் இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளதுஎன இந் நிறுவன முதன்மை செயல் காவலர் கூறினார்.












Click it and Unblock the Notifications