தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

இலங்கை அரசின் கோரிக்கை: இந்தியா உதவ மறுப்பு

டெல்லி:

யாழ்பாணத்தில் விடுதலைப் புலிகளிடமிருந்து தனது 40,000 ராணுவப் படையினரைக் காப்பாற்றுமாறு இலங்கை அரசு விடுத்தவேண்டுகோளை இந்தியா நிராகரித்துவிட்டது.

யாழ் நகரை நோக்கி விடுதலைப் புலிகள் மிக வேகமாக முன்னேறி வருகின்றனர். வழியில் யானை இறவு ராணுவ முகாமைஅழித்துவிட்ட புலிகள் பெரும் அளவிலான ஆயுதங்களையும் கைப்பற்றிவிட்டன்.

இதையடுத்து புலிகளின் தாக்குதல் திறன் பல மடங்கு அதிகரித்துவிட்டது. இப்போது யாழ்பாணத்தில் நிலை கொண்டுள்ளஇலங்கை ராணுவத்தினர் அங்கிருந்து வெளியேற முடியாத அளவுக்கு அந்த நகரைச் சுற்றிலும் புலிகள் நிலை கொண்டுள்ளனர்.

எனவே, அவர்களைக் காப்பாற்ற உதவுமாறு இந்தியாவிடம் இலங்கை அரசு கோரிக்கை விடுத்தது. இது குறித்து பிரதமர்வாஜ்பாய், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த்சிங், பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ், ராணுவத் தளபதி, ரா, ஐ.பிஆகிய உளவுப் படையினர், இலங்கைக்கான இந்திய தூதர் சிவசங்கர் மேனன் ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.

இதில் இலங்கை ராணுவத்துக்கு எந்த விதத்திலும் உதவுவதில்லை என இந்தியா முடிவெடுத்தது. ஆனால், புலிகள் தாக்குதலில்பொது மக்கள் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு மனிதாபிமான உதவிகளை அளிப்போம் என்று இந்தியா அறிவித்துள்ளது.

இந்தியாவில் சுமார் 1 லட்சம் இலங்கை அகதிக் உள்ளனர். மேலும் அகதிகள் இந்தியாவுக்கு வரும் நிலை ஏற்படாமல் தடுப்போம்என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங் கூறினார்.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+