தமிழகத்தில் இன்று
ஜகார்த்தா:
இந்தோனேஷிய நாட்டில் சுலாவேசி தீவில் வியாழக்கிழமை ஏற்பட்ட பலத்தநிலநடுக்கத்தில் 4 பேர் இறந்தனர்.
பிற்பகல் 12.21 மணிக்கு ஏற்பட்ட இந் நிலநடுக்கத்தால், சுலாவேசி தீவு பெரும்பாதிப்புக்குள்ளானது. ரிக்டெர் அளவுகோலில் 6.5 என்று நிலநடுக்கத்தின் பாதிப்புபதிவானது.
சுலாவேசி தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பு அருகில் உல்ள சுனாமி தீவிலும்எதிரொலித்தது. நிலநடுக்கத்தால், சுலாவேசி தீவில் உள்ள கடற்கரை நகரமான லுவுக்மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் உள்ள தீவுகளிலும் லேசான நிலஅதிர்ச்சி ஏற்பட்டது.பங்காய் தீவில் இருந்த நிறைய கட்டடங்கள் தரைமட்டமாயின.
கட்டட இடிபாடுகளில் சிக்கி இறந்த 3 பேருடைய சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.4-வது நபர் நிலஅதிர்ச்சியால் ஏற்பட்ட திடீர் மாரடைப்பில் இறந்தார். மீட்புப் பணிதீவிரமாக நடைபெற்று வருகிறது.
கட்டட இடிபாடுகளுக்குள் மேலும் பலர் சிக்கியிருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.ஆகவே, நிலநடுக்கத்தால் இறந்தவர்கள் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்றுமீட்புப் பணியினர் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications