கீதையின் பாதையில்... யோகம் - யாகம் - துரோகம்
பீஜிங்:தெற்கு சீனாவில் கடந்த சில நாட்களாகப் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுக்கு இதுவரை 26 பேர்இறந்துள்ளனர்.
குவாங்டோன் மாகாணத்தில், மீக்ஸியான் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவுக்கு 11 பேர் இறந்தனர். 2 பேர் திடீர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு நீரில்மூழ்கி இறந்தனர். 2 பேர் மின்னல் தாக்கி இறந்தனர்.
பலத்த மழையின்போது ஏற்பட்ட சாலை விபத்தில் 11 பேர் இறந்துள்ளனர். தெற்கு சீனா முழுவதும் தற்போது பலத்த மழை பெய்து வருகிறது.தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கானவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.
தெற்கு சீனாவுக்குச் சுற்றுலா வந்த வெளிநாட்டுப் பயணிகள் 4 ஆயிரம் பேர் வெள்ளத்தால் சூழப்பட்டனர். அவர்களை மீட்புப் பணியினர் பத்திரமாக மீட்டுவேறு இடத்துக்கு அனுப்பிவைத்தனர்.
வெள்ளத்தினால் ஏற்பட்ட சேத மதிப்பு 5 மில்லியன் டாலர் என்று கணக்கிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications