தமிழகத்தில் இன்று
வரும் நிதியாண்டில் 100 கோடி ரூபாய்க்கு கைத்தறித் துணிகள் ஏற்றுமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என்று தமிழக கைத்தறித் துறை அமைச்சர்என்.கே.கே.பெரியசாமி தெரிவித்தார்.
சட்டசபையில் வெள்ளியன்று கைத்தறித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இவ்விவாதத்திற்கு அமைச்சர் பதிலளித்தார். அவர்கூறியதாவது:
கைத்தறி நெசவாளர்கள் பணியில் இருக்கும்போது இறந்தால் அவரது குடும்பத்திற்கு வழங்கப்பட்டு வந்த 40 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை 50 ஆயிரமாகஉயர்த்தப்பட்டுள்ளது. அதோடு கோ-ஆப்டெக்ஸ் சார்பில் 8 ஆயிரம் ரூபாய் தரப்படுகிறது. இதை 10 ஆயிரமாக உயர்த்தி, மொத்தம் 60 ஆயிரம் ரூபாய் இனிவழங்கப்படும்.
நெசவாளர் ஓய்வூதியம் 150 ரூபாயில் இருந்து 200 ரூபாயாக உயர்த்தப்படும்.
ஏற்றுமதி விற்பனை மேம்பாட்டுக்காக, கைத்தறி இயக்குனர் அலுவலகத்தில் விற்பனையாளர்கள், வாங்குபவர்கள் பலன் பெறும் வகையில் காலம், வடிவமைப்பு,வெப்சைட், இ-காமெர்ஸ் உள்ளிட்ட வசதிகள் கொண்ட தனி நிலையம் அமைக்கப்படும்.
வரும் நிதியாண்டில் ரூ.100 அளவுக்கு ஏற்றுமதி திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. 2005ல் வரவிருக்கும் உலக வர்த்தக அமைப்பை சந்திக்க அனைத்துஏற்பாடுகளும் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஏற்றுமதி ரகங்களை உற்பத்தி செய்யவதற்காக, ஈரோடு, சேலம், கோவை, கரூர், தர்மபுரி மாவட்ட நெசவாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்றார்.