For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மேட்ச் ஃபிக்ஸிங்: போலீஸ் காவலை எதிர்த்து ராஜேஷ் கல்ரா தாக்கல் செய்த மனு தள்ளுபடி

By Staff
Google Oneindia Tamil News

புது தில்லி:

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் குரோனியேவுடன் மேட்ச்ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்ட ராஜேஷ் கல்ரா, போலீஸ் காவலைஎதிர்த்துத் தாக்கல் செய்த மனுவை தில்லி உயர்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடிசெய்தது.

கடந்த மாதம் கைது செய்யப்பட்ட கல்ரா, தற்போது நீதிமன்றக் காவலில் திஹார்சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரிடம் விசாரணை நடத்த விரும்பியஅமலாக்கப்பிரிவு அதிகாரிகள் கல்ராவை தங்கள் காவலுக்கு அனுப்பும்படிநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.

இந்த மேட்ச் ஃபிக்ஸிங் வழக்கில் ராஜேஷ் கல்ரா முக்கிய சாட்சியாகும். அவரிடம்விசாரணை நடத்தவேண்டும். அவரிடம் விசாரிக்காவிட்டால் முக்கிய தகவல்கள்கிடைக்காமல் போய்விடும். ஆகவே, அவரை அமலாக்கப்பிரிவு அலுவலகத்துக்குசுமார் 8 மணி நேரத்துக்கு அனுப்பவேண்டும் என்று மனுவில் அமலாக்கப்பிரிவுஅதிகாரிகள் கோரியிருந்தனர்.

இந்த மனு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் உஷா மெஹ்ரா, மதன்லோகுர் ஆகியோர் விசாரித்தனர். கல்ராவிடம் திஹார் சிறையிலேயே விசாரிக்கலாமேஎன்று நீதிபதிகள் கூறினர். ஆனால், அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் சார்பில் ஆஜரானகூடுதல் சொலிசிடர் ஜெனரல் ஜெய்சிங்கானி, அமலாக்கப்பிரிவு அலுவலகத்தில்விசாரணை நடத்தினால்தான் அது முழுமையாக இருக்கும். அப்போதுதான்விசாரணைத் தகவல்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றார்.

கல்ராவின் வீட்டிலிருந்து டைரி ஒன்று கைப்பற்றப்பட்டது. அதில், பல பேருடையபெயர்களும் விலாசங்களும், தொலைபேசி எண்களும் உள்ளன. அவை எல்லாம்கிரிக்கெட் சூதாட்டக்காரர்களுடையதாக இருக்கலாம் என்றும், கிரிக்கெட் சூதாட்டத்தில்அதிக அளவில் அன்னியச் செலாவணி மோசடி நடந்திருக்கலாம் என்றும்சந்தேகிக்கிறோம். ஆகவே, அவரை அமலாக்கப்பிரிவு அலுவலகத்தில் விசாரிக்கஅனுமதிக்கவேண்டும் என்றும் அவர் கூறினார்.

ஆனால், வீட்டிலிருந்து அமலாக்கப்பிரிவு எடுத்தது என்னுடைய சொந்த டைரியாகும்என்று கூறிய கல்ரா, அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் தன்னை மனரீதியாககொடுமைப்படுத்துவதாகப் புகார் கூறினார். மேலும், அவர்களது காவலுக்குச் செல்லமறுப்புத் தெரிவித்தார். இது தொடர்பாக அவரது சார்பில் ஒரு மனுவும் தாக்கல்செய்யப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், கல்ராவின் மனுவைத் தள்ளுபடிசெய்து, மற்றொரு தேதிக்கு இவ் வழக்கை ஒத்திவைத்தனர்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X