கீதையின் பாதையில்... யோகம் - யாகம் - துரோகம்

Subscribe to Oneindia Tamil

வானவெளியில் இன்று ஒரே நேர்க்கோட்டில் 6 கோள்கள் அணிவகுப்பு

வாஷிங்டன்:

நம்முடைய அண்டவெளியில் அதாவது சூரியக் குடும்பத்தில் இன்று ஒரு அதிசயம் நடைபெற உள்ளது. புதன், சுக்கிரன், செவ்வாய், சனி, வியாழன் ஆகியகோள்கள் பூமிக்கும், சூரியனுக்கும் இடையே ஒரே நேர்க்கோட்டில் இன்று அணிவகுக்கின்றன. இவற்றுடன் சந்திரனும் இக் கோட்டில் வருகிறதுஎன்பது குறிப்பிடத்தக்கது.

இன்று பிற்பகல் 1.30-க்கு இந்த அதிசயம் தொடங்குகிறது. இதுபோன்று இரண்டுக்கும் மேற்பட்ட கோள்கள் ஒரே நேர்க்கோட்டில் அணிவகுப்பதுபல ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் சம்பவமாகும். இப்போது நடைபெறும் இச் சம்பவத்துக்குப் பிறகு இதுபோன்று ஒரே நேர்க்கோட்டில் கோள்கள்அணிவகுப்பது 2040-ம் ஆண்டில் நிகழும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்த அணிவகுப்பு சில மணி நேரங்களே நீடிக்கும். அதனால், அதை யாராலும்பார்க்க இயலாது.

இந்த அணிவகுப்பால் பூமிக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். ஆனால், உலகம் அழிந்துவிடும் என்று டூம்ஸ் டே தியரிகூறுகிறது. அப்படி பூமிக்கு ஏதாவது நடந்தால், அதற்கு விண்வெளியையும், கோள்களையும் குறை கூறக்கூடாது என்று நாஸா விண்வெளி ஆய்வு மையம்தெரிவித்துள்ளது. இன்று நடைபெறுவதைப் போல், மே 17-ம் தேதியும் கோள்கள் ஒரே நேர்க்கோட்டில் வரும் என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+