For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

முகத்தில் தெளித்த சாரல்...

By Staff
Google Oneindia Tamil News

ஊழல் வழக்கு: சேடப்பட்டி முத்தையா மகள் ஜாமீனில் விடுதலை
சென்னை:

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சேடப்பட்டி முத்தையாவின் மகள் மலர்விழியை ஜாமீனில்விடுதலை செய்ய தனி நீதிமன்றம் உத்தரவிட்டது. அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையையும் நிறுத்திவைக்கநீதிமன்றம் உத்தரவிட்டது.

தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி காலத்தில் சபாநாயகராக இருந்தவர் சேடப்பட்டி முத்தையா. இவர் மீதும் இவரதுகுடும்பத்தார் மீதும் வருமானத்துக்கு அதிகமாக ரூ 45 லட்சம் அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்குத்தொடரப்பட்டிருந்தது. இந்நிலையில் சேடப்பட்டி முத்தையா, அவரது இரு மகன்களுக்கு ஏற்கனவே தண்டனைவழங்க தனிநீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கு விசாரணையின் போது சேடப்பட்டி முத்தையாவின் மகள் மலர்விழி கர்ப்பமாக இருந்ததால் அவரதுவழக்கு மட்டும் தனியே பிரிக்கப்பட்டு பின்னர் தீர்ப்பு வழங்கப்பட்டது. வழக்கை விசாரித்த தனிநீதிமன்ற நீதிபதிஆறுமுகப் பெருமாள் அவருக்கு ரூ 25 ஆயிரம் அபராதமும், ஓராண்டு சிறைத்தண்டனையும் வழங்குவதாகத்தீர்ப்பளித்தார்.

இதை எதிர்த்து மலர்விழி தனக்கு வழங்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யும்படியும், தனக்கு ஜாமீன்அளிக்குமாறும் கோர்ட்டில் ஜாமீன் மனுத் தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டேவிட் கிறிஸ்டியன் மலர்விழிக்கு விதித்த ஓராண்டு சிறைத்தண்டனையை நிறுத்திவைக்கும்படியும், அவரை ஜாமீனில் விடக் கோரியும் தீர்ப்பளித்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X