தமிழகத்தில் இன்று
சென்னை:
இலங்கைப் பிரச்சினையில் தமிழகத்தில் ஆளும் திமுகவையோ அல்லது தேசியஜனநாயகக் கூட்டணியில் உறுப்பினராக உள்ள கட்சிகளையோ கலந்தாலோசிக்காமல்மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காது என்று நம்புவதாக தமிழக முதல்வரும்,திமுக தலைவருமான மு. கருணாநிதி தெரிவித்தார்.
இலங்கைப் பிரச்சினை குறித்து பிரதமர் வாஜ்பாயுடன் தில்லியில் பேச்சு நடத்திவிட்டுசனிக்கிழமை காலை சென்னை திரும்பிய கருணாநிதி, விமான நிலையத்தில்நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
தேச நலனை முன்னிட்டு எந்த முடிவையும் எடுக்க மத்திய அரசுக்கு உரிமையுள்ளது.மத்திய அரசில் திமுக, மதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகிக்கின்றன.ஆகவே, எந்த முடிவு எடுத்தாலும் அது குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் மத்திய அரசுஆலோசனை நடத்தவேண்டும்.
இலங்கைப் பிரச்சினையைப் பொறுத்தவரையில், கூட்டணிக் கட்சிகளைகலந்தாலோசிக்காமல் மத்திய அரசு எந்த முடிவும் எடுக்காது என்று நம்புகிறேன்.
போர் நடைபெறுவதால் இலங்கையிலிருந்து தமிழர்கள் அகதிகளாக தமிழகத்துக்குவரநேரிட்டால், நிலைமையைப் பொறுத்து தமிழக அரசு தக்க நடவடிக்கை எடுக்கும்.
இலங்கைக்கு ராணுவத்தை அனுப்பவேண்டியிருந்தால் அது குறித்து தமிழக அரசுடன்மத்திய அரசு நிச்சயம் ஆலோசிக்கும் என்றார் கருணாநிதி.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications