தமிழகத்தில் இன்று
காஷ்மீர்:
தீவிரவாத அமைப்பான ஹிஸ்புல் முஜாகிதீனின் ஜம்மூ மாவட்ட கமாண்டர் உள்பட 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
தோடா மாவட்டம் பெலியா கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து ராணுவம் அந்தகிராமத்தை சுற்றி வளைத்தது. இதையடுத்து ராணுவத்தின் மீது திவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். ராணுவத்தினர் திருப்பிச்சுட்டதில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
அவர்களிடமிருந்து ஏ.கே.-56 ரக துப்பாக்கிகள், 6 கேசின்கள், 120 குண்டுகள், 4 கிரனைட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மனோ கிராமத்தில் ராணுவத்தினர் தேடுதல் வேட்டை நடத்தியபோது ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதி முகம்மத் ரியாஸ் என்றபெதாப் தப்பி ஓடினான். அவனை ராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர். அவனிடமிருந்து ஏ.கே-56 ரக துப்பாக்கி, குண்டுகள்பறிமுதல் செய்யப்பட்டன.
உதம்பூர் நகரில் தியேட்டரில் படம் பார்த்துவிட்டு வந்து கொண்டிருந்த சக்தி சிங் எனபவரை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர்.இதனை எதிர்த்து அந்த நகரில் கடைகள் அடைக்கப்பட்டன. இந்த கொலையை எதிர்த்து போராட்டம் நடத்திய ஒரு கும்பல் அந்ததியேட்டரின் மீது தாக்குதல் நடத்தியது. தியேட்டர் உரிமையாளரின் காருக்கும் தீ வைத்தனர்.
மேலும் வைஷ்ணவி தேவி ஆலயம் அருகே கத்ரா ராணுவ முகாம் அருகே நிறுத்தப்பட்டிருந்த 2 அரசு வாகனங்களுக்கும் ஒருகும்பல் தீ வைத்தது. சிங்கை சுட்டுக் கொன்ற தீவிரவாதிகளை உடனே கைது செய்யக் கோரி இந்த வன்முறையில் அவர்கள்ஈடுபட்டனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications