தமிழகத்தில் இன்று
பாட்னா:
பிகாரில் ஆசிரியர் பயிற்சி மாணவர்களுக்கு போலி பிஎட் சான்றிதழ் வழங்கிய அமைச்சர் ராஜினாமா செய்தார்.
இந்த வழக்கில் குற்றம்சுமத்தப்பட்டுள்ள அமைச்சர் ஜெய்பிரகாஷ் நாராயண் யாதவ் ராப்ரி தேவிஅமைச்சரவையிலிருந்து ராஜினாமா செய்தார்.
இவர் 1987 ம் ஆண்டு பிகாரில் கல்வி மந்திரியாக இருந்தார். அப்போது ஆசிரியர் பயிற்சி பெற்றவர்களுக்கு பிட்பட்டப்படிப்பிற்காக போலி சான்றிதழ் வழங்கியதாக இவர் மீது குற்றம்சாட்டப்பட்டது.
இந்த ஊழல் வழக்குத் தொடர்பாக இவருக்கு பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது குற்றம்சாட்டப்பட்டு உள்ள மந்திரி, மூத்த ஐஏஎஸ் அதிகாரி சிந்து நாயக் உள்பட 41 பேருக்கு ஜாமீனில்வரமுடியாத கைது வாரன்ட் பிறப்பித்து நீதிபதி எஸ்.பி.ராய் உத்தரவிட்டார்.
இந்நிலையில் அமைச்சர் ஜெய் பிரகாஷ் நாராயண் யாதவ் ராஜினாமா செய்துள்ளார். இவர் ராப்ரிதேவிஅமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications