தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
தப்பியோடும் ராணுவவீரர்களுக்கு ஓராண்டு கடுங்காவல்: இலங்கை அரசு சட்டம்
கொழும்பு:
தப்பி ஓடும் ராணுவ சிப்பாய்களை கைது செய்து ஒரு ஆண்டு சிறையில் தள்ள இலங்கை அரசு புதிய சட்டம் பிறப்பித்து இருக்கிறது.
விடுதலைப்புலிகளின் தாக்குதலுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் சில இடங்களில் ராணுவ சிப்பாய்கள் தப்பி ஓடுகிறார்கள். அவர்களை தடுத்து நிறுத்த, இலங்கைஅரசு கடுமையாக சட்ட திருத்தம் ஒன்றை அமுல்படுத்தி இருக்கிறது.
அவ்வாறு தப்பி ஓடுபவர்களைக் கண்டு பிடித்து ஒரு ஆண்டு சிறையில் அடைக்க அந்த சட்டதிருத்தம் வழி வகுக்கிறது. இது தவிர சந்தேகத்துக்குஇடமானவர்களை விசாரணை இல்லாமல் கைது செய்யும் உத்தரவும் அங்கு அமுலில் இருந்து வருகிறது.
விமானங்கள், கப்பல்கள், முன் அறிவிப்பு இல்லாமல் சோதனை நடத்தப்படுவதுடன், முழு அதிகாரமும் ராணுவத்திடம் ஒப்படைக்க சட்ட திருத்தம் வழிவகைசெய்கிறது.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications