தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
கோவையின் புதிய எஸ்.பி.தாமரைக்கண்ணன்
சென்னை:
கோவை மாவட்டத்திற்குப் புதிய எஸ்.பி.,யாக தாமரைக்கண்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
கோவை மாவட்ட எஸ்.பி.,எஸ். கிருஷ்ணமூர்த்தி, சென்னையில் உள்ள சி.பி.சி.ஐ.டி., பிரிவு எஸ்.பி.,யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இப்பதவியில் இருந்த ராகவன் கடந்த மாதம் 30ம் தேதியுடன் ஓய்வு பெற்று விட்டார்.
சி.பி.சி.ஐ.டியின் சிறப்பு புலனாய்வுப் பிரிவு எஸ்.பி.,யாக பதவி வகித்த வி.மாதவராஜ் கடந்த மாதம் 30ம் தேதி ஓய்வு பெற்றார்.
இந்த பதவியிடத்தில், திருச்சி நகர குற்றம் மற்றும் போக்குவரத்துப் பிரிவு துணை கமிஷனர் எம்.ராஜசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை சி.பி.சி.ஐ.டி., பிரிவில் எஸ்.பி.யாக இருந்த பி.தாமரைக்கண்ணன் , கிருஷ்ணமூர்த்திக்கு பதிலாக கோவை மாவட்ட எஸ.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அரசு வெளியிட்ட அறிவிப்பில் இத்தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications