தமிழகத்தில் இன்று
சென்னை:
தமிழகத்தில் வரும் சட்டசபைத் தேர்தலில் அதிமுக தேர்தலில் தனித்து நின்று வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என்று அதிமுக பொதுச்செயலாளர்ஜெயலலிதா கூறியுள்ளார்.
அதிமுகவின் செயற்குழுக் கூட்டம் சென்னையில் சனிக்கிழமை நடந்தது. அப்போது அதிமுக வின் அவைத்தலைவராக காளிமுத்து தேர்ந்தெடுக்கப்பட்டதாகஜெயலலிதா தெரிவித்தார்.
பின்னர் சட்டசபைத் தேர்தல் குறித்து கூறும்போது தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியில் அதிமுக தனித்து நின்று அருதிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெரும்.
அதிமுக வின் வெற்றி மிகத் துல்லியமாகத் தெரிகிறது. பழைய நிர்வாகிகள், ஊழல்குற்றம் சாட்டப்பட்டவர்களைக் களைந்தெடுத்து விட்ட நிலையில்நிச்சயமாய் அதிமுக விற்கு நல்ல எதிர்காலம் உள்ளது.
தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை. பாட்டாளி மக்கள் கட்சி எங்களுடன் கூட்டணி வைக்க முயற்சி செய்கிறது என்று கூறுவதுபொய். இதுவரை அக்கட்சியிலிருந்து யாரும் என்னைத் தொடர்பு கொண்டு பேசவில்லை. அரசியலில் எதுவும் நடக்கலாம்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications