தமிழகத்தில் இன்று
டெல்லி:
இந்திய விமானப் படைத் தலைவர் ஏ.ஒய். டிப்னிஸ் இலங்கை சென்றார்.
யாழ்பாணத்தில் 40,000 ராணுவத்தினரை விடுதலைப் புலிகள் சுற்றி வளைத்து தாக்க முயற்சித்து வருகின்றனர்.ராணுவ வீரர்களை காப்பாற்ற உதவுமாறு இந்தியாவிடம் இலங்கை கோரியது. நேரடியாக ராணுவத்தை அனுப்பிஇலங்கைக்கு உதவ முடியாது என இந்தியா அறிவித்துள்ளது.
ஆனால், மனிதாபிமான அடிப்படையிலான பிற உதவிகளை வழங்குவதாக இந்தியா உறுதியளித்துள்ளது. இந்தஉதவியில் ஆயுதங்களும் அடங்குமா என்பது குறித்து ஏதும் தெரியவில்லை.
இந் நிலையில் இந்திய விமானப் படை டிப்னிஸ் இலங்கை சென்றுள்ளார். இது இந்த பிரச்சனை தோன்றுவதற்குமுன்பாகவே திட்டமிடப்பட்ட பயணம் தான் என்றாலும் இன்றைய நிலையில் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இது தவிர திருவனந்தபுரத்தில் அத்தியாவசியப் பொருள்கள் ஏற்றப்பட்ட நிலையில் இரு பெரிய விமானப் படைவிமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. யாழ்பாணத்தில் மோதல் முற்றி பொதுமக்களுக்கு சேதம் ஏற்படும்பட்சத்தில்இந்த விமானங்கள் இலங்கை சென்று அத்தியாவசியப் பொருள்களை வழங்கும்.
ஆனால், இந்த சிறப்பு சரக்கு விமானங்கள் குறித்த செய்தியை மத்திய அரசு மறுத்துள்ளது. இந்த விமானங்கள்வழக்கமான பயணமாகத் தான் இலங்கை செல்லவுள்ளன என இந்தியா தெரிவித்துள்ளது.
இப்போதைய இலங்கை பிரச்சனைக்கும் இந்திய விமானப் படைத் தலைவரின் பயணத்துக்கும் எந்த சம்பந்தமும்இல்லை என அறிவிக்கப்பட்டுளளது. 5 நாட்கள் இலங்கையில் தங்கவுள்ள டிப்னிஸ் அங்கு முப்படைகளின் கூட்டுத்தலைவர் ஜெனரல் கேராஹன் டி தளுவத்தேயை சந்திப்பார். பின்னர் 3 படைகளின் தலைவர்களையும் சந்திப்பார்.
ராணுவ தளங்களையும் பார்வையிடுவார். அதிபர் சந்திரிகாவையும் டிபிஸ் சந்திர்ப்பார் எனக் கூறப்படுகிறது.
யு.என்.ஐ.