For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News
தனித் தமிழ் ஈழத்துக்கு ஆதரவில்லை: டெல்லி அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு

டெல்லி:

தனித் தமிழ் ஈழத்துக்கு ஆதரவு தர முடியாது என டெல்லியில் பிரதமர் வாஜ்பாய் தலைமையில் நடந்த அனைத்துக் கட்சிகூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. அதே நேரத்தில் இலங்கையின் ஒற்றுமைக்கும் இறையாண்மைக்கும் இந்தியா முழு ஆதரவுவழங்கும் எனவும் இந்தக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

புலிகள் ஆதரவு கட்சிகளான சில தமிழக கட்சிகளும் மத்திய அரசின் இந்த நிலையை ஏற்றுக் கொண்டுவிட்டன.

கூட்டத்துக்குப் பின் வெளியே வந்த பிரதமர் வாஜ்பாய் நிருபர்களிடம் கூறுகையில், இலங்கை அரசியல் சட்டத்துக்கு உட்பட்டுதான் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும். அதே நேரத்தில் தமிழ் மொழி பேசும் மக்களின் உரிமைகளும் காக்கப்பட வேண்டும்.இலங்கை பிரச்சனையை நாங்கள் கண்டு கொள்ளாமல் இருப்பதாகக் கூறுவது தவறு.

தொடர்ந்து அங்கு நிலைமையை கண்காணத்து தான் வருகிறோம். ஆனால், ராணுவரீதியில் தலையிட மாட்டோம் என்பதைதெரிவித்துவிட்டோம். முனபு ராணுவத்தை அனுப்பியதன் மூலம் ஏற்பட்ட அனுபவம் ஒரு சிக்கலான அனுபவம் என்றார்வாஜ்பாய்.

முன்னதாக அனைத்துக் கட்சி கூட்டத்தில் பேசிய வாஜ்பாய், இலங்கை பிரச்சினையில் எந்தவிதமான அறிக்கைகளும் விட்டுகுழப்ப வேண்டாம் என தேசிய ஜனநாயக முன்னணயில் உள்ள தமிழக கட்சிகளை (திமுக, மதிமுக, பாமகா) கேட்டுக் கொண்டார்.கூட்டத்தில் பேசிய ஒரு தமிழக எம்.பி. இப்போது இலங்கை சென்றுள்ள விமானப் படைத் தலைவர் டிப்னிசை உடனே இந்தியாதிரும்பச் சொல்ல வேண்டும் என்றார். இதற்கு பதிலளித்த வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த்சிங் இது முன்பே திட்டமிட்டபயணமாகும், இது இரு நாடுகளின் உறவை வலுப்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை, இந்த பயணத்துக்கும்இப்போதைய பிரச்சனைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றார்.

மேலும் அவர் கூறுகையில், இலங்கை அரசும், விடுதலைப் புலிகளும் கேட்டுக் கொண்டால் மட்டுமே எந்த உதவியும் செய்வோம்.இப்போது உள்ள நிலையில் இரு தரப்பினருமே எந்த உதவியும் கேட்சவில்லை. இதனால், மத்தியஸ்தம் செய்யும் பேச்சுக்கேஇடமில்லை. பிரச்சினை தொடர்பாக பல நாடுகளுடனும் பேசிவிட்டேன். எந்த நாடும் இலங்கைய பிரச்சினையில் தலையிடும்எண்ணத்தில் இல்லை. ஆனால், இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடக்கச் செய்யநார்வே முயன்று வருகிறது. நாங்கள் நார்வேயுடன் தொடர்பு கொண்டு வருகிறோம் என்றார்.

கூட்டத்துக்குப் பின் நிருபர்களிடம் பேசிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரமோத் மகாஜன், இலங்கையில் எந்தமூன்றாவது நாடும் தலையிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என அனைத்துக் கட்சிகளும் கேட்டுக் கொண்டன. முக்கியமாகராணுவத்தை இலங்கைக்கு அனுப்பவே கூடாது என்று அனைத்து கட்சிகளுமே கேட்டுக் கொண்டன என்றார்.

இலங்கை பிரச்சனை குறித்து தங்களுடன் தமிழக முதல்வர் கருணாநிதி எந்த ஆலோசனையும் நடத்தவில்லை என அதிமுகபொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளது குறித்து பிரதமரிடம் ஒரு நிருபர் கேட்டார். இதற்கு வாஜ்பாய் பதிலளிக்கையில், இப்பிரச்சனை தொடர்பாக தமிழகத்தின அனைத்துக் கட்சிகளுடனும் சில நாட்களில் ஆலோசனை நடத்தப்படும் என்றார்.

இந்த செய்தி குறித்து உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம்

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X