தமிழகத்தில் இன்று
சென்னை:
அதிமுக மாணவரணி மாவட்டச் செயல்வீரர்கள் கூட்டம் இம்மாதம் 14ம் தேதி துவங்கி 30ம் தேதி வரை நடைபெறும் என்று அக்கட்சியின்பொதுச்செயலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
கட்சியில் எல்லா அமைப்புகளையும் ஜெயலலிதா மாற்றியமைத்துள்ளார். இளைஞரணி, மாணவரணி, ஜெ. பேரவை என எல்லா துணை அமைப்புகளும்மாற்றியமைக்கப்பட்டுள்ளன. மாற்றியமைக்கப்பட்ட இந்த அமைப்புகளை முடுக்கி விடும் வகையில் அதன் கூட்டங்களை நடத்த ஜெயலலிதாஉத்தரவிட்டுள்ளார்.
அதன்படி ஜெயலலிதா பேரவை கூட்டம் தற்போது மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இப்பேரவையின் புதிய தலைவராக சசிகலா அக்கா மகன்தினகரன் பொறுப்பேற்றுள்ளார்.
அடுத்ததாக மாணவரணிக் கூட்டங்களை நடத்த ஜெயலலிதா திங்கள் கிழமை உத்தரவிட்டார். இந்த அணியின் புதிய பொறுப்பாளராக தங்க தமிழ்ச் செல்வன்நியமிக்கப்பட்டார். அதன் மாநில நிர்வாகிகளும் மாற்றப்பட்டுள்ளனர்.
தற்போது மாணவரணியின் மாவட்டச் செயல் வீரர்கள் கூட்டத்தை மாவட்டந்தோறும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 14ம் தேதி மதுரையில்துவங்கும் இக்கூட்டம், 15ம் தேதி நெல்லையிலும், 16ம் தேதி தூத்துக்குடியிலும் நடைபெறுகிறது. 30ம் தேதி வரை இக்கூட்டம் தொடர்ச்சியாகநடத்தப்படுகிறது என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications