For Quick Alerts
For Daily Alerts
Just In
தமிழகத்தில் இன்று
தமிழகத்திற்கு கிருஷ்ணா நதி நீர் வருவது வெறும் கனவல்ல: முதல்வர் கருணாநிதி
சென்னை:
தமிழகத்திற்குக் கிருஷ்ணா தண்ணீர் கிடைப்பது என்பது வெறும் கனவு மட்டுமல்ல. அதைக் கிடைக்கும்படிச் செய்வோம் என்று தமிழக முதல்வர் கருணாநிதிகூறியுள்ளார்.
சென்னையில் மூன்று மேம்பாலங்களைத் திறந்து வைத்து அவர் பேசியதாவது:
எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்திலிருந்தே இப்பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு கிடைத்தபாடில்லை. அவர் போராடிய போராட்டத்திற்குப் பின் தமிழ்நாட்டிற்குசொற்ப அளவு கிருஷ்ணா நதி நீர் கிடைத்தது. அப்போது நான் எல்லையில்லா மகிழ்ச்சியடைந்தேன்.
தமிழகத்தில் எம்.ஜி.ஆர்.மறைவுக்குப் பின் கிருஷ்ணா நதிநீரைக் கொண்டு வருவதற்கு யாரும் முயலவில்லை.
கிருஷ்ணாநதி நீர் திட்டம் வெறும் கனவு மட்டுமல்ல என்றார்.
யு.என்.ஐ.
Story first published: Monday, May 8, 2000, 5:30 [IST]