கிரிக்கெட் மேட்ச் பிக்சிங்: முக்கிய தடயம் ஏதும் கிடைக்கவில்லை
டெல்லி:
கிரிக்கெட் மேட்ச் பிக்சிங் ஊழல் விசாரணையில் இதுவரை முக்கிய தடயம் ஏதும் சிக்கவில்லை எனவும் முக்கியதிருப்பம் ஏதும் ஏற்படவில்லை எனவும் சி.பி.ஐ. தெரிவித்துள்ளது.விசாரணைக் குழுவின் தலைவரும் சிபிஐ இணை இயக்குனருமான சவானி நிருபர்களிடம் கூறுகையில்,விசாரணைக்கு காலக்கெடு ஏதும் இல்லை. மனோஜ் பிரபாகர் டெல்லி திரும்பியவுடனேயே அவரிடம் விசாரணைநடத்தப்படும்.மேட்ச் பிங்சிங்கில் ஈடுபட்டவர்கள் குறித்து தன்னிடம் ஆதாரம் இருப்பதாக இந்திய கிரிக்கெட் வாரியத்தின்முன்னாள் தலைவர் பிந்த்ரா கூறியுள்ளார். ஆனால், அதற்கான ஆதாரம் எதையும் பிந்த்ரா சிபிஐயிடம் தரவில்லை.இந்திய வீரர்கள், அதிகாரிகளுக்கு இந்த மோசடியில் தொடர்பு இருந்ததா என்பது மட்டும் குறித்தே நாங்கள்விசாரித்து வருகிறோம். அப்படி யாருக்காவது தொடர்பிருப்பது தெரியவந்தால், எங்கே இந்தத் திட்டம்தீட்டப்பட்டது, யார் யாருக்கெல்லாம் இதில் தொடர்பிருந்தது என்பது குறித்தும் சிபிஐ விசாரிக்கும்.மேட்ச் பிங்சிங்குக்கும் மும்பை தாதாக்களுக்கும் தொடர்பிருப்பதாகக் கூறப்படுவது குறித்து எங்களுக்கு எந்தஆதாரமும் கிடைக்கவில்லை. இதில் தாவூத் இப்ராகிம், அவனது தம்பி அனீசுக்கு தொடர்பிருப்பது உறுதியானால்அவர்களை இந்தியா கொண்டுவர சிபிஐ முயற்சிக்கும்.இந்தியாவுக்கு வெளியிலும் இந்த மோசடியில் ஈடுபட்டவர்களுக்குத் தொடர்பிருந்தால் அன்னிய நாட்டுபுலனாய்வு அமைப்புகளின் உதவியையும் கோருவோம்.காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சரும் முன்னாள் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவருமானமாதவ்ராவ் சிந்தியாவுக்கு 1993ம் ஆண்டில் மேட்ச் பிக்சிங் தொடர்பாக முக்கிய விவரம் ஒன்றுதெரிவிக்கப்பட்டதாக முன்னாள் மத்திய வருவாய்த்துறை செயலாளர் சிவராமன் கூறியுள்ளார். சிந்தியாவுக்குதொலைபேசியில் தான் அந்த செய்தி தெரிவிக்கப்பட்டதாகவும், இந்த தொலைபேசி பேச்சு அடங்கிய கேசட்மத்திய வருவாய்த்துறை புலனாய்வுப் பிரிவிடம் உள்ளதாகவும் தெரிகிறது. இந்த கேசட்டை கொடுக்குமாறு சிபிஐகேட்டுக் கொண்டுள்ளது.இவ்வாறு சவானி கூறினார்.