தமிழகத்தில் இன்று
சென்னை:
மத்திய மாநில அரசுகளின் பொருளாதாரக் கொள்கைகளை கண்டித்து 11ம் தேதி நாடு முழுவதும் நடைபெறவுள்ள பொது வேலைநிறுத்தப் போராட்டத்தில் தமாகா பங்கேற்கும் என்று அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மூப்பனார் கூறினார்.
இதுபற்றி சென்னையில் திங்கள் கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை வருமாறு:
மத்திய அரசு பின்பற்றி வரும் பொருளாதாரக் கொள்கைகளும், நிர்வாக முடிவுகளும் பெருமளவில் பொதுமக்களையும்,குறிப்பாக ஏழை எளிய அடித்தட்டு மற்றும் நடுத்தட்டு வர்க்க மக்களை மிகவும் பாதிப்புக்குள்ளாக்கி உள்ளன.
அத்தியாவசியப் பொருட்களான அரிசி, கோதுமை, மண்ண்ெணெய், சமையல் எரிவாயு ஆகியவைகளின் விலைகள் பல மடங்குஉயர்த்தப்பட்டதுடன், விவசாய இடு பொருளான யூரியா விலையும் மிகவும் உயர்ந்துள்ளது.
பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை எவ்வித முறையான கொள்கைகளை வகுக்காமல், அதற்கான நிபுணர்கள் அடங்கியஆணையத்தையும் நியமிக்காமல், தன்னிச்சையாக, ரகசியமாக அமைச்சரும், அதிகாரிகளும் மட்டுமே முடிவு செய்து விற்பனைசெய்வதும், சேலம் உருக்காலை போன்றவற்றை விற்க முயற்சிப்பதும் கண்டனத்திற்குரியது.
உள்நாட்டு உற்பத்தியை ஆதரித்துப் பாதுகாக்கும் வகையில், இறக்குமதி செய்யப்படும் வெளிநாட்டுப் பொருட்களுக்கு உலகவியாபார நிறுவனம் அனுமதித்துள்ள சுங்கவரியை கூட விதிக்காமல், இறக்குமதி செய்வது உள்நாட்டுத் தொழிலை பெருமளவில்நசிக்கச் செய்து விடும்.
நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகள் கதவடைப்புச் செய்துள்ளன. பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பசியிலும்,பட்டினியிலும் வாடுகின்றனர். அதே நேரத்தில் பன்னாட்டு மூலதன நிறுவனங்கள் லாப வேட்டைக்காக தங்களது கடன் வலையைபரக்க விரித்துள்ளனர்.
விவசாயிகளின் உற்பத்திக்கு கட்டுப்படியான விலைகள் கிடைக்க ஏற்பாடு செய்யாத மத்திய அரசு, விவசாய இடுபொருட்களின்விலையை பன்மடங்கு உயர்த்தி, விவசாயிகளின் முதுகெலும்பை ஒடிக்கச் செய்து விட்டது. விவசாயத் தொழிலாளர்கள் சடடம்,பெண்களுக்கு 33 சதவீத ஒதுக்கீடு, 14 வயது வரையிலான இலவசக் கல்வி போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வெகுஜனஅமைப்புகளின் தேசிய மேடை சார்பில் மே 11ம் தேதி அகில இந்திய பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடப்பட்டுள்ளது.
இந்த வேலை நிறுத்தம் வெற்றி பெற தமாகாவினரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று மூப்பனார் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications