தமிழகத்தில் இன்று
திருச்சி:
தமிழ்நாட்டில் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாகச் செயல்பட்டு வருவதாக மூப்பனார் தெரிவித்தார்.
திருச்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
இலங்கைப் பிரச்சனையில் மதிமுக வும், பாமக யும் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகவே பேசி வருகின்றன. அவர்கள் தங்களது கட்சியின்கொள்கைகளுக்கேற்ப இவ்வாறு பேசலாம். மத்திய அரசு ராணுவ உதவி அளிக்க மறுத்திருப்பது அவர்களது கொள்கைகளையே காட்டுகிறது.
மேலும் இலங்கை பிரச்சனையில் தமிழக முதல்வர் கருணாநிதி டெல்லி சென்று பிரதமர் வாஜ்பாயைச் சந்தித்துப் பேசினார். தமிழகத்தில் மூத்த தலைவரானஅவர் டெல்லி செல்லுமுன் எங்களையும் அழைத்து ஆலோசித்திருந்தால் இன்னும் பலமாக இருந்திருக்கும்.
அதிமுக யாருடனும் கூட்டணி இல்லை. தனித்துப் போட்டியிடும் என்று கூறியிருக்கிறார். கருணாநிதி கூட ஒரு முறை இப்படிக் கூறியிருக்கிறார். நாங்கள்தமிழ்நாட்டில் ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாகச் செயல்பட்டு வருகிறோம்.
தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் இலங்கைப் பிரச்சனை குறித்து வெவ்வேறு கருத்துக்களைச் சொல்லி வருகிறார்கள். கட்சியின் இறையாண்மையைப்பொறுத்து மத்திய அரசு இப்பிரச்சனைக்குத் தீர்வு காணும். இவ்வாறு அவர் கூறினார்.