For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News
யாழ்பாணத்தில் புலிகளை தாக்க ஆரம்பித்துவிட்டது இலங்கை ராணுவம்

டெல்லி:

யாழ்பாணத்தில் விடுதலைப் புலிகளை ராணுவம் தாக்க ஆரம்பித்துவிட்டது என இந்தியாவுக்கான இலங்கை தூதர் மங்களமூனசிங்கே கூறினார்.

ஸ்டார் டிவிக்கு அவர் அளித்த பேட்டி:

யாழ்பாணத்தை சுற்றி கடந்த 5 நாட்களாக நிலைகொண்டுள்ள விடுதலைப் புலிகளால் கொஞ்சமும் முன்னேற முடியவில்லை.அவர்களை ராணுவம் தாக்க ஆரம்பித்துவிட்டது. இலங்கை ராணுவத்துக்கு தேவையான ஆயுதங்களும் பிற நாடுகளில் இருந்துவர ஆரம்பித்துவிட்டன.

ஆனால், எங்களுக்கு ஆயுதம் தரும் நாடுகளின் பெயரை வெளியிட விரும்பவில்லை.

யாழ்பாணத்திலிருந்து இலங்கை ராணுவத்தை வாபஸ் பெறும் பேச்சுக்கே இடமில்லை. ஆனால். இப்போது உள்ள நிலையிலேயேபோர் நிறுத்தத்துக்கு இலங்கை தயார். ஆனால், போர் நிறுத்தம் என்ற பெயரில் யாழ்பாணத்திலிருந்து ராணுவத்தை முழுமையாகவெளியேற்றிவிட்டு உள்ளே நுழைய புலிகள் முயல்கின்றனர்.

இதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். புலிகளுக்கு பிரச்சனை தருவோம். யாழ்பாணத்தில் இப்போது நிலைமைமாறிவிட்டது.

புலிகள், இலங்கை அரசுக்கு இடையே சமரசம் செய்து வைக்க இந்தியா தயார் என அறிவித்திருப்பதை வரவேற்கிறோம் என்றுமூனசிங்கே கூறினார்.

இந்த செய்தி குறித்து உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம்

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X