தமிழகத்தில் இன்று
சென்னை:
திமுக ஆட்சியில் கடந்த நான்கு ஆண்டுகளில் 678 கோடி ரூபாய்க்கு வரிச் சலுகை அளிக்கப்பட்டுள்ளது என்று சட்டசபையில் அமைச்சர் ஆலடி அருணாதெரிவித்தார்.
சட்டசபையில் செவ்வாய் கிழமை வணிக வரி மற்றும் மாவட்ட நிர்வாகம் பற்றிய மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது. முதல்வரின் சார்பில்இந்த மானியக் கோரிக்கைகளை சட்ட அமைச்சர் ஆலடி அருணா தாக்கல் செய்தார். விவாதத்திற்கும் அவரே பதிலளித்தார்.
தமிழக அரசின் மொத்த வருவாயில் பெரும் பங்கு வகிப்பது விற்பனை வரி தான். இதன் மூலம் தான் அரசின் மொத்த வருவாயில் 70 சதவீதம் கிடைக்கிறது.
ஆனால், அரசின் வருவாயை மட்டுமே கணக்கில் கொள்ளாமல் இந்த அரசு செயல்பட்டுள்ளது. அதனால் கடந்த 4 ஆண்டுகளில் வரி விதிப்புகள் மிகவும்குறைவு.
வழக்கமாக பட்ஜெட் தாக்கல் என்றால, வரி விதிப்பும், வரி உயர்வும் தான் இருக்கும். ஆனால், திமுக ஆட்சியில் தாக்கல் செய்யப்பட்ட நான்குபட்ஜெட்டுகளிலும் வரிக்குறைப்பும், வரிச் சலுகையும் தான் இருந்தது.
இந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் ரூ. 678 கோடி ரூபாய் அளவுக்கு வரிச் சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன. வழக்கமாக முதல்வர் கருணாநிதி தன்னைப் பற்றிகுறிப்பிடும் போது, "என்னுடைய பெயரில் கருணை அதிகம். நிதி குறைவு என்பார். ஏனென்றால் கருணை என்பது மூன்றெழுத்து. நிதி இரண்டெழுத்து. ஆனால்,உண்மையில் அவர் கருணை உள்ளத்தோடு நிதியை வாரி வழங்குவார் என்பது இந்த வரிச்சலுகைகளின் மூலம் மக்கள் தெரிந்து கொண்டுள்ளனர் என்றார்.












Click it and Unblock the Notifications