தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
உணவில் பல்லி: 81 மாணவர்கள் மயக்கம்
திருச்சி:
பாரத் ஹெவி எலக்ட்ரானிக் லிமிடெட் பயிற்சிப் பள்ளியின் விடுதியிலுள்ள 81 மாணவர்கள் அங்கு கொடுக்கப்பட்ட இரவு உணவை சாப்பிட்டு மயங்கிவிழுந்தனர்.
இதுகுறித்துப் போலீசார் கூறுகையில், விடுதியில் கொடுக்கப்பட்ட உணவை சாப்பிட்டு விட்டு மாணவர்கள் அனைவரும் மயங்கி விழுந்துள்ளனர்.
அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். சிகிச்சைக்குப் பின் அவர்கள் குணமடைந்து வருகிறார்கள் என்றனர்.
அவர்களுக்காக செய்யப்பட்ட இரவு உணவில் பல்லி விழுந்ததால் அந்தப் பயிற்சி மாணவர்கள் மயக்கமடைந்திருக்கலாம் என்று போலீசார்சந்தேகிக்கின்றனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications