தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil
புலிகள் பிரச்சனை: மதிமுக-அதிமுக மோதல்

சென்னை:

விடுதலைப் புலிகள் விஷயத்தில் அதிமுகவும் மதிமுகவுக்கும் இடையே பெரும் மோதல் ஏற்பட்டுளளது.

புலிகளுக்கு ஆதரவாக வைகோவும், புலிகள்- வைகோ இருவருக்கும் எதிராக அதிமுகவும் கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

1995ம் ஆண்டில் யாழ்பாணத்தை இலங்கை ராணுவம் கைப்பற்றியபோது லட்சக்கணக்கான தமிழர்கள் பாதிக்கப்பட்டனர்.அப்போதெல்லாம் மனிதாபிமான உதவி குறித்து ஏதும் பேசாத மத்திய அரசு இப்போது மட்டும் இலங்கை அரசுக்கு ஆதரவாகமனிதாபிமான உதவி பற்றி பேசுவது மனதுக்கு கஷ்டமாக உளளது என மதிமுக தலைவர் வைகோ கூறினார்.

டெல்லியில் பிரதமர் தலைமையில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்துப் பின் நிருபர்களிடம் வைகோ கூறியதாவது:

ஆனால், இலங்கை ராணுவத்துக்கு ஆயுதங்கள் வழங்குவதில்லை என்ற பிரதமரின் முடிவு மிகச் சரியானது. ராஜிவ் காந்திகொல்லப்பட்டபோது எல்.டி.டி.ஈ. மீது தமிழகத்தில் ஏற்பட்ட வெறுப்பு மறைந்துவிட்டது. இப்போது புலிகளுக்கு ஆதரவு தான்அதிகரித்துள்ளது என்றார் வைகோ.

அதிமுக சார்பில் அனைத்துக் கட்சி கூட்டத்தில் கலந்து கொண்ட பி.எச். பாண்டியன் எம்.பி. கூறுகையில், லைகோவும் மதிமுகவும்தமிழக மக்களின் பிரதிநிதிகள் அல்ல. தமிழகத்திலேயே பெரிய கட்சி அதிமுக தான். எங்கள் கட்சியின் தலைவி ஜெயலலிதா தான்இந்தியாவில் விடுதலைப் புலிகள் மீது தடை போடப்படுவதற்குக் காரணம்.

எனவே ஜெயலலிதாவுடனும் பிரதமர் ஆலோசனை நடத்த வேண்டும். ராணுவ உதவியை இலங்க்ைகு தரக் கூடாது. எந்த உதவிசெய்தாலும் செஞ்சிலுவை சங்கம் மூலம் தான் செய்ய வேண்டும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+