தமிழகத்தில் இன்று
திருச்சி:
இலங்கையில் போர் நடப்பதையொட்டி இந்தியக் கடற்பகுதிகளில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாய் தமிழ்நாட்டில் திருச்சியில் 4 கடற்படை விமானங்கள், ஒரு ஹெலிக்காப்டர் நிறுத்தப்பட்டுள்ளன.
இலங்கையில் யாழ்ப்பாணம் பகுதியில் 40 ஆயிரம் சிங்கள ராணுவ வீரர்களை விடுதலைப்புலிகள் சுற்றிவளைத்துள்ளனர். அவர்களை உயிரோடு மீட்பதற்காக இந்தியா ராணுவ உதவி செய்ய வேண்டும் என்று இலங்கைஅதிபர் சந்திரிகா குமாரதுங்கா கேட்டுக் கொண்டார்.
ஆனால் இதற்கு இந்தியா மறுத்து விட்டது. இந்தியப் பிரதமர் வாஜ்பாய் சர்வகட்சிக் கூட்டம் நடத்தி அனைத்துக்கட்சித் தலைவர்களின் மனநிலை குறித்து ஆராய்ந்தார். அப்போது அவர்கள் அனைவரும் இந்தியா இலங்கைக்குராணுவ உதவி எதுவும் அளிக்க வேண்டாம் என்று முடிவெடுத்தனர்.
இதையடுத்து இந்தியா இலங்கைப் பிரச்சனைக்கு சுமூகமான முறையில் வேண்டுமானால் தீர்வு காண உதவிசெய்யலாம். ஆனால் ராணுவ உதவியோ, அல்லது ராணுவ ஆயுதங்களோ கொடுத்து உதவ இந்தியா தயாராகஇல்லை என்று தெரிவித்து விட்டது.
திருச்சியில் கடற்படை விமானப் பாதுகாப்புத் தீவிரம்:
இலங்கையில் போர் நடந்து வருவதால் இந்தியாவில் கடற்பகுதிகளில் விடுதலைப்புலிகளோ அல்லது வேறுசிலரோ நுழைந்து விடலாம் என்று அச்சம் நிலவுகிறது. இதனால் இந்தியாவில் கடற்பகுதிகள் திவிரமாகக்கண்காணிக்கப்படுகின்றன.












Click it and Unblock the Notifications