தமிழகத்தில் இன்று
பாட்னா:
பிகாரில் ரெளடிக்கும்பல் துப்பாக்கியால் சுட்டதில் 15 அப்பாவிக் கட்டிடத் தொழிலாளர்கள் பலியானார்கள்.
பிகாரில் லக்கிசாராய் மாவட்டம் ஹாசன்பூர் கிராமத்தில் ரெளடிக்கும்பலைச் சேர்ந்தவர்கள் அப்பகுதியில் வேலை செய்துகொண்டிருந்த 15 அப்பாவி கட்டிடத்தொழிலாளர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டதில் அவர்கள் இறந்தனர்.
கியூல் ஆற்றங்கரையிலிருந்து கட்டிடத்தொழிலாளர்கள் மண் எடுக்கும் போது ரெளடிக்கும்பல் தங்களுக்குள் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டனர்.அப்போது அங்கு வேலை செய்து கொண்டிருந்த கட்டிடத்தொழிலாளர்கள் 15 பேர் இறந்தனர்.
கியூல் ஆற்றிலிருந்து மண் எடுக்கும்போது ரெளடிக்கும்பலுக்கும், கட்டிடத் தொழிலாளர்களுக்கும் ஏற்பட்ட தகராறில் 15 கட்டிடத் தொழிலாளர்கள்கொல்லப்பட்டனர்.
இச்சம்பவத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு நஷ்டஈடாக ரூ 20, 000 வழங்குவதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தினர் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தில் இறந்த அனைவரது உடல்களும் மீட்கப்பட்டுவிட்டன. அங்கே கலவரம் தொடராதவாறு போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
லல்லு விரைந்தார்:
விபத்து நடந்த இடத்தை ராஷ்டிரிய ஜனதாதளத் தலைவர் லல்லுப் பிரசாத் யாதவ், மாநில டிஜிபி கே.சி.ஜேக்கப் மற்றும் உயர்போலீஸ் அதிகாரிகள் நேரில்சென்று பார்வையிட்டனர்.
யு.என்.ஐ.