தமிழகத்தில் இன்று
சென்னை:
ராமேஸ்வரத்தில் இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தமிழக மீனவர் ஒருவர் படுகாயமடைந்தார். அவரது நிலை மிகவும் ஆபத்தாகஉள்ளது.
ராமேஸ்வரத்தில் கடலில் மீன் பிடிக்கச் சென்றிருந்த மீனவர்களை நோக்கி இந்தியக் கடற்படையைச் சேர்ந்தவர்கள் துப்பாக்கியால் சுட்டனர். அப்போதுமீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர் ஒருவர் படுகாயமடைந்தனர்.
காயமடைந்த மீனவர் முனீஸ்வரன் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்தத் துப்பாக்கிச் சூட்டின் போது உடனிருந்த மேலும் மூன்று மீனவர்கள் இவரை ராமேஸ்வரத்திலிருந்து மதுரைக்குக் கொண்டு வந்து சேர்த்தனர்.
மீனவர் முனீஸ்வரனுக்கு அளிக்கப்படும் சிகிச்சைக்கான அனைத்து உதவிகளையும், செலவுகளையும் தமிழக அரசு ஏற்றுக்கொள்ளும் என்று மீன்வளத்துறைஅமைச்சர் ஜெனிஃபர் சந்திரன் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகம் தமிழக கடற்கரையோரம் தாக்கப்படுவது குறித்து விசாரணை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது.
இதுதவிர கடந்த ஒரு வாரத்திற்கு முன்புதான் தமிழக மீனவர்கள் மூன்று பேர் இலங்கைக் கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதைக் கண்டித்துமுதல்வர் கருணாநிதி அறிக்கை விட்டுள்ளார் என்பது தெரிந்ததே.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications