செயலை விட அதன் பயனை நேசித்தால்!
போலாகோவன் (அஸ்ஸாம்):
அஸ்ஸாம் மாநிலத்தில் மதம் பிடித்த நிலையில் கிராமத் தலைவரைக் கொன்றயானையை, அக்கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சுட்டுக் கொன்று, கொடூரமான முறையில்உடலை துண்டித்துள்ளனர்.
போலாகோவன் என்ற இடத்தில் 40 வயதான இந்த யானையின் சிதைந்த நிலையிலானஉடல் கிடந்தது. கொடூரமாக கொல்லப்பட்ட இந்த யானையின் பெயர் லக்கி பகதூர்.ஜுபாம்பாரி தேயிலைத் தோட்டத்தில் யானையின் உடல் கிடந்தது. அழுகிய நிலையில்உடல் இருந்தது. தலை, தந்தங்கள், தும்பிக்கை, கால் ஆகியவைதுண்டிக்கப்பட்டிருந்தன. கால் விரல் நகங்கள் கூட பிய்த்து எடுக்கப்பட்டுள்ளது. உடலேகண்டம் துண்டமாக வெட்டியெடுக்கப்பட்டிருந்தது.
லக்கி பகதூரை வளர்த்து வந்த 75 வயதான சோபுர் அலியும், அவரது எட்டு உறுப்பினர்கொண்ட குடும்பமும் இந்த சம்பவத்தால் இடி விழுந்தது போன்ற அதிர்ச்சியில்மூழ்கியுள்ளனர்.
மதம் பிடித்த நிலையில், சமீபத்தில் ஜுபாம்பாரி கிராமத் தலைவர் ஒருவரை பகதூர்மிதித்துக் கொன்று விட்டது. இதையடுத்து பகதூரை அக்கிராம மக்கள் கொன்றுவிட்டனர். அதிக உஷ்ணம் காரணமாக பகதூருக்கு மதம் பிடித்ததாகக் கூறப்படுகிறது.
அஸ்ஸாமில் உள்ள யானைகளுக்கு அடிக்கடி மதம் பிடிப்பது வழக்கம். ஆனால்அதற்காக இப்படி எந்த யானையும் கொடூரமாக கொல்லப்பட்டதில்லை. முதல்முறையாக இச்சம்பவம் நடந்துள்ளது.
அஸ்ஸாமில் உள்ள காடுகளில் மொத்தம் 2000 யானைகள் இருப்பதாகக்கூறப்படுகிறது. யானை கொல்லப்பட்டது குறித்து சோபுர் அலி கூறுகையில், எனதுமகனை இழந்தது போல உள்ளது. சிறு குட்டியாக இருந்தது முதலே, பகதூரை நான்எனது மகன் போல வளர்த்து வந்தேன் என்றார். இப்படிச் சொல்லும்போதே, அவரதுகண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பகதூர் கொல்லப்பட்டது முதலே சோபுர்அலி சாப்பிடாமல் இருந்து வருகிறார்.
உலகிலேயே அதிக அளவில் யானைகள் உள்ள பிரதேசம் அஸ்ஸாம். இங்கு 1996-முதல் அடிக்கடி யானைகளுக்கு மதம் பிடித்து வருகிறது. இதற்குக் காரணம் அங்குள்ளவனப் பகுதிகள் அழிக்கப்படுவதுதான். இங்கு மரங்களை வெட்டுவதற்குஉச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. இருப்பினும் மரங்கள் வெட்டுவதுகுறைந்தபாடில்லை.
மரங்கள் அதிகம் வெட்டப்படுவதால் காடுகளில் உஷ்ணம் அதிகரித்து, யானைகளுக்குமதம் பிடிக்கிறது.
50 பேர், 20 யானைகள் சாவு:
கடந்த சில ஆண்டுகளில் மதம் பிடித்த யானைகளால் 50 பேர் வரைகொல்லப்பட்டுள்ளனர். 20-க்கும் மேற்பட்ட யானைகள் பதிலுக்குக்கொல்லப்பட்டுள்ளன.
ஐ.ஏ.என்.எஸ்.
-
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications